சீகாளத்திப் புராணம்
மேவ
ரும்பர மானந்த வீட்டினுள்
தாவி னன்மணம் காணிய
சார்ந்தவர்
யாவ ரும்புகு வித்தருள் செந்தமிழ்ப்
பாவ லன்மலர்த் தாள்முதல் பற்றுவாம்.
-
மூவர்.
திருக்கழுக்குன்றப் புராணம்
கண்ணைப்பா
டசையுமிரு கனங்குழையைக்
கமழ்குழலைக் கனகச் செப்பை
விண்ணைப்பா டகத்தாளைக் கழைத்தோளைக்
கலந்துதிரு
மேனி தோன்றப்
பண்ணைப்பா டலத்தாறு பதம்பாடும்
பொழின்மயிலைப் பதியென் பாய
பெண்ணைப்பா
டியபுகலிப் பிள்ளையைப்பா
டித்துயரம் பெயரச் செய்வாம்.
- அந்தகக்கவி வீரராகவப்
புலவர். |