குலைந்திருந்தது. தமிழ் நாட்டின்
வடபகுதியில் மகேந்திரவர்ம பல்லவனும், தென்பகுதியில்
நின்றசீர்நெடுமாற பாண்டியனும் சமண சமயம் சார்ந்து
இருந்ததால் மக்களும் வேற்றுச்சமய நெறிகளை விரும்பத்
தொடங்கியிருந்தனர். இறைவன் திருவருளால் இவ்விரு
பெருமக்களும் தோன்றிச் சைவ சமயத்தைத் தமிழகத்தில்
நிலைபெறச் செய்தனர்.
ஞானசம்பந்தர்:
ஞானசம்பந்தர் திருவவதாரத்தால்
தமிழ்
மொழி தழைத்தது. தமிழ்ச்சமய நெறியே உலகில்
உயர்ந்தது என்பதை மக்கள் அறிந்து போற்றத் தொடங்கினர்
எனக் கூறுகிறார் சேக்கிழார்.
அடங்கல் முறை:
மூவர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களைப்
பண்முறை, தலமுறை, வரலாற்று முறை என மூவகையாக
அடைவு செய்வர். இவை அடங்கல் முறை எனப்படும்.
அடங்கல் - தொகுப்பு. இவற்றுள் பண்முறையே நம்பியாண்டார்
நம்பிகளால் தொகுக்கப்பெற்றது. இதுவே திருமுறை
வரிசையில் ஒன்று இரண்டு முதலியனவாக எண்ணியுரைக்கும்
நிலையில் உள்ளது. நம்பிகள் ஞானசம்பந்தர்
அருளிய தேவாரத் திருப்பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாக
அமைத்துத் தந்துள்ளார்.
முதல் திருமுறை:
இத்திருமுறையில் நட்டபாடை (22), தக்கராகம்
(24), பழந்தக்கராகம் (16), தக்கேசி (12),
குறிஞ்சி (29), வியாழக் குறிஞ்சி (25) மேகராகக்
குறிஞ்சி (8) ஆகிய ஏழு பண்களில் 136 திருப்பதிகங்கள்
அமைந்துள்ளன. இவற்றின் பாடல் எண்ணிக்கை 1469.
திருப்பதிகம்:
பதிகம் என்பதற்குப்
பத்துப் பாடல்களைக் கொண்டது என்பது பொருள். பெரும்பாலானவை பத்துப்பாடல்களைக்
கொண்டும் சில கூடியும் குறைந்தும் இருப்பினும் அவை
பதிகம் எனவே பெயர் பெறும். ஞானசம்பந்தர்
பதிகங்கள் பத்துப் பாடல்களுக்கு மேல், பயன்கூறும்
திருக்கடைக்காப்புடன் பதினொரு பாடல்களைக் கொண்டதாய்
விளங்குவன.
|