243. மயிலார் சாயன் மாதோர்
பாகமா
எயிலார் சாய வெரித்த வெந்தைதன்
குயிலார் சோலைக் கோலக் காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே. 5
244. வெடிகொள் வினையை
வீட்ட வேண்டுவீர்
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடிகொள் விழவார் கோலக் காவுளெம்
அடிகள் பாத மடைந்து வாழ்மினே. 6
__________________________________________________
5. பொ-ரை: ஆண்மயில் போலும் கட்புலனாகிய
மென்மையை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனும்,
அசுரர்களின் முப்புரங்கள் கெடுமாறு அவற்றை எரித்தவனும்
ஆகிய எம் தந்தையாகிய சிவபிரானது, குயில்கள்
நிறைந்து வாழும் சோலைகளை உடைய திருக்கோலக்காவைப்
பலகாலும் நினைக்கப் பாவங்கள் நீங்கும்.
கு-ரை: திரிபுரம் எரித்த செல்வன் எழுந்தருளியுள்ள
கோலக்காவை இடைவிடாது நினைக்கப் பாவம் பறையும்
என்கின்றது.
மாது - உமாதேவி. நோக்கினார்கண்ணுக்கு
இனிமையும், பிறவியான் வரும் மயக்கம் அறுக்கும்
மருந்துமாகலின் இறைவி மயிலார்சாயலள் ஆயினள்.
எயிலார் - திரிபுராதிகள். பயிலா நிற்க - இடைவிடாது
தியானிக்க.
6. பொ-ரை: ஒன்றிலிருந்து பிறிதொன்று கிளைக்கும் வினைப்பகையை நீக்கிக்
கொள்ள விரும்புகின்றவர்களே! மணம் பொருந்திய
கொன்றை மலர் விரவிய சென்னியை உடையோனும்,
கொடிகள் கட்டப்பெற்று விழாக்கள் பலவும் நிகழ்த்தப்பெறும்
கோலக்காவில் விளங்கும் எம் தலைவனும் ஆகிய
பெருமான் திருப்பாதங்களை அடைந்து வாழ்வீர்களாக.
கு-ரை: இது வினைகெட வேண்டுவீர் கோலக்காவின்
அடிகளை அடைந்து வாழுங்கள் என்கின்றது.
வெடிகொள்வினை - வாழை சிங்கம் வெடித்தது
என்றாற் போல ஒரு முதலிலிருந்து பலவாகப் பல்கும்வினை.
கடி - மணம்.
|