பக்கம் எண் :

 27. திருப்புன்கூர்480


சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்
அல்லல் தீரு மவல மடையாவே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

யும் வல்லவர்கட்குத் துன்பங்கள் நீங்கும். எக்காலத்தும் அவலம் அவர்களை அடையா.

கு-ரை: இது இப்பாடல் பத்தும் வல்லார்க்கு அல்லல் தீரும் என்கின்றது. நல்லகேள்வி - நல்லகேள்வியால் விளைந்த அறிவு. அன்றிக் கேள்வி என்பதனைச் சுருதி என்பதன் மொழிபெயர்ப்பாகக் கொண்டு வேதம் வல்ல ஞானசம்பந்தன் என்றுமாம். சேடர் - எல்லாம் தத்தம் காரணத்துள் ஒடுங்க அவை தமக்குள் ஒடுங்கத் தாம் ஒன்றினும் ஒடுங்காது, ஒடுங்கியவைகள் மீட்டும் உதிக்க மிச்சமாய் இருப்பவர்; பெருமையையுடையவர் என்றுமாம். அல்லல் - துன்பம். அவலம் - வறுமை.

திருக்கோவலூர்ப் புராணம்

அஞ்ஞானத் துவராடை யமணர்மத முதலான
இஞ்ஞாலத் திழிசமய விருங்கடலி னிடைப்படா
மெய்ஞ்ஞானத் துறுவிக்கும் வியன்காழிக் கவுணியர்கோன்
தஞ்ஞானச் சரண்தொழுவார் சரணெமக்குச் சரணாமே.

- மீனாட்சி சுந்தரம் பிள்ளை.

சிவபுண்ணியத் தெளிவு

பிறையணி மௌலியான் பேதை யாளொடுஞ்
சிறையணி புனற்றடத் தீர மேவியே
நிறையமு தருத்தவுண் ணெகிழப் பாடுநான்
மறையவன் மலர்ப்பதம் வணங்கி வாழ்த்துவாம்.;

- உமாபதி சிவாசாரியார்.