284. மூவ ராய முதல்வர் முறையாலே
தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர்
ஆவ ரென்னு மடிக ளவர்போலும்
ஏவி னல்லா ரெயின்மூன் றெரித்தாரே. 2
285. பங்க யங்கண் மலரும்
பழனத்துச்
செங்க யல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க்
கங்கை தங்கு சடையா ரவர்போலும்
எங்க ளுச்சி யுறையும் மிறையாரே. 3
286. கரையு லாவு கதிர்மா
மணிமுத்தம்
திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர்
__________________________________________________
2. பொ-ரை: பகைமை பூண்டவராய
அசுரர்களின் மூன்று அரண்களைக் கணையொன்றால் எரித்தழித்த
இறைவர், பிரமன், மால், உருத்திரன் ஆகிய மூவராயும்,
அவர்களுக்கு முதல்வராயும், தேவர்கள் எல்லோரும்
முறையாக வந்து வணங்குபவராயும்
விளங்கும் திருப்புன்கூரில் எழுந்தருளிய அடிகள் ஆவர்.
கு-ரை: இது முப்பெருந்தேவராய், எல்லாத்
தேவராலும் வணங்கப்பெறும் இறைவன் திருப்புன்கூர்நாதன்
என்கின்றது. மூவர் ஆய முதல்வர் - திருச்சிவபுரப்
பதிகத்துக் குறித்தவண்ணம் பிரமன் மால் உருத்திரன்
என்ற முத்தேவராயும், அவர்க்கு முதல்வராயும் உள்ளவர்.
அடிகள் ஆவர் என்னும் அவர் போலும் எனக்கூட்டுக.
ஏ - அம்பு. அல்லார் - பகைவர்.
3. பொ-ரை: எங்கள் தலைகளின் மேல் தங்கி விளங்கும்
இறைவர், தாமரை மலர்கள்
மலரும் வயல்களில் சிவந்த கயல் மீன்கள் திளைத்து
மகிழும் திருப்புன்கூரில் எழுந்தருளியுள்ள கங்கை தங்கிய
சடை முடியினராகிய சிவபெருமானாராவர்.
கு-ரை: திருப்புன்கூர் நாதனே எங்கள்
முடிமீது உறையும் இறைவன் என்கின்றது. பழனம் - வயல்.
இவர் கங்கை தங்கும் சடையாராதலின் நீர்வளமிகுந்து
பழனங்களில் செங்கயல்கள் திளைக்கின்றன என்பதாம்.
4. பொ-ரை: மணத்தால் மேம்பட்ட தாமரைமலர் போலும் சிவந்த திருவடிகளை உடைய
இறைவர், ஒளி பொருந்திய சிறந்த
|