பக்கம் எண் :

486திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


293. மாட மல்கு மதில்சூழ் காழிமன்
சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர்
நாட வல்ல ஞான சம்பந்தன்
பாடல் பத்தும் பரவி வாழ்மினே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

பிண்டமுண்ணுதல் - சுவைத்து மென்றுதின்னாது விழுங்குதல். பிராந்தர் - மயக்க அறிவினர்.

11. பொ-ரை: மாடவீடுகளால் நிறையப் பெற்றதும் மதில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப் பதிக்குத் தலைவனாய், எதையும் நாடி ஆராய்தலில் வல்ல ஞானசம்பந்தன், பெரியோர்களும் செல்வர்களும் வாழும் திருப்புன்கூர் இறைவர்மீது பாடிய பாடல்கள் பத்தையும் பரவி வாழ்வீர்களாக.

கு-ரை: இது இப்பதிகத்தை ஓதின் வாழலாம் என்கின்றது. சேடர்க்கு முன்னுரைத்தாங்கு உரைக்க. பத்தும் பரவி - பத்தாலும் தோத்திரித்து.

திருப்புகழ்

புமியதனிற் ப்ரபுவான

புகலியில்வித் தகர்போல

அமிர்தகவித் தொடைபாட

அடிமைதனக் கருள்வாயே

சமரிலெதிர்த் தசுரர்மாளத்

தனியயில்விட் டருள்வோனே

நமசிவாயப் பொருளானே

ரசதகிரிப் பெருமாளே.

- அருணகிரிநாதர்.