302. தொழுவா ரிருவர் துயர
நீங்கவே
அழலா யோங்கி யருள்கள் செய்தவன்
விழவார் மறுகில் விதியான் மிக்கவெம்
எழிலார் சோற்றுத் துறைசென் றடைவோமே.
9
303. கோது சாற்றித் திரிவா
ரமண்குண்டர்
ஓது மோத்தை யுணரா தெழுநெஞ்சே
நீதி நின்று நினைவார் வேடமாம்
ஆதி சோற்றுத் துறைசென் றடைவோமே. 10
304. அந்தண் சோற்றுத் துறையெம்
மாதியைச்
சிந்தை செய்ம்மி னடியா ராயினீர்.
__________________________________________________
9. பொ-ரை: தம் செருக்கடங்கித் தம்மைத்
தொழுத திருமால் பிரமன் ஆகிய இருவர்க்கும்,
அழலுருவாய் ஓங்கி நின்று அருள்களைச் செய்தவன்,
விரும்பி உறையும் விழாக்கள் நிகழும் வீதிகளில்
வேத விதியோடு வாழும் மக்களை உடைய சோற்றுத்துறையைச்
சென்றடைவோம்.
கு-ரை: தொழுவார் இருவர் - தம்
செருக்கு அடங்கித் தொழுத அயனும் திருமாலும். மறுகு -
வீதி. விதி - வேதவிதி.
10. பொ-ரை: நெஞ்சே! குற்றங்களையே
பலகாலும் சொல்லித் திரிபவராகிய சமண் குண்டர்கள்
ஓதுகின்ற வேதத்தை அறிய முயலாது, சிவாகம நெறி நின்று,
நினைப்பவர் கருதும் திருவுருவோடு வெளிப்பட்டருளும்
முதல்வனாகிய சிவபிரானது சோற்றுத்துறையை நாம் சென்றடைவோம்.
கு-ரை: கோது - குற்றம். ஓதும் ஓத்தை
- ஓதுகின்ற பிடக வேதத்தை. நீதி நின்று - சிவாகம நெறிக்கண்
நின்று. நினைவார் வேடம் ஆம் ஆதி - தியானிப்பவர்கள்
தியானித்த உருவிற்சென்று அருளும் முதல்வன்.
11. பொ-ரை: அடியவர்களாக உள்ளவர்களே!
அழகு தண்மை ஆகியவற்றோடு விளங்கும் திருச்சோற்றுத்துறையில்
எழுந்தருளிய எம் முதல்வனை மனத்தால் தியானியுங்கள்.
சந்த இசையால்
|