பாடல் வண்டு பயிலு நறையூரில்
சேடர் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 4
309. உம்ப ராலு முலகின் னவராலும்
தம்பெ ருமைய ளத்தற் கரியானூர்
நண்பு லாவு மறையோர் நறையூரில்
செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.
5
310. கூரு லாவு படையான் விடையேறி
போரு லாவு மழுவா னனலாடி
பேரு லாவு பெருமா னறையூரில்
சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே. 6
__________________________________________________
உடைய நறையூரில் பெரியோர் வணங்கித்
துதிக்கும் சித்தீச்சரத்தைத் தெளிவாயாக.
கு-ரை: நீடவல்ல - மிகமேலும் வளரவல்ல.
சேடர் - பெருமையுடையவர்.
5. பொ-ரை: நெஞ்சே! தேவர்களாலும்,
உலகிடை வாழும் மக்களாலும் தனது பெருமைகளை அளவிட்டுக்
கூறுவதற்கு அரியவனாகிய சிவபிரானது ஊராய், நட்புத்
தன்மையால் மேம்பட்ட மறையவர்கள் வாழும் திருநறையூரில்
சிவபிரான் எழுந்தருளிய செம்பொன்மயமான சித்தீச்சரத்தையே
தெளிவாயாக.
கு-ரை: உம்பர் - தேவர். உலகின்னவர்
- மக்கள். உம்பர்கள் மலத்தான் மறைப்புண்டு இன்பத்துள்
மயங்கி இறைவனை மறந்து, தம் பெருமை யொன்றையே நினைத்திருப்பவராதலின்
அவர்களால் இவன் பெருமை அளக்கமுடியாதாயிற்று. மக்கள்
மலத்தான் கட்டுண்டு ஆன்மபோதமிக்கிருத்தலின்
மக்களால் அளக்கமுடியாதாயிற்று.
6. பொ-ரை: கூர்மைமிக்க சூலப்படையை
உடையவனாய், விடை மீது ஏறிப் போருக்குப் பயன்படும்
மழுவாயுதத்தை ஏந்தி, அனல்மிசை நின்றாடி, ஏழுலகிலும்
தன் புகழ் விளங்க நிற்கும் சிவபெருமான் திருநறையூரில்
விளங்கும் சித்தீச்சரமே நாம் வழிபடற்குரிய இடமாகும்.
|