311. அன்றி நின்ற வவுணர்
புரமெய்த
வென்றி வில்லி விமலன் விரும்புமூர்
மன்றில் வாச மணமார் நறையூரில்
சென்று சித்தீ்ச் சரமே தெளிநெஞ்சே.
7
312. அரக்க னாண்மை யழிய
வரைதன்னால்
நெருக்க வூன்றும் விரலான் விரும்புமூர்
பரக்குங் கீர்த்தி யுடையார் நறையூரில்
திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.
8
313. ஆழி யானு மலரி னுறைவானும்
ஊழி நாடி யுணரார் திரிந்துமேல்
சூழ நேட வெரியா மொருவன்சீர்
நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே. 9
__________________________________________________
கு-ரை: கூர் உலாவு படை - கூர்மை மிக்க
சூலப்படை. பேர் - புகழ். நறையூரில் சேரும் இடம் சித்தீச்சரம்
ஆம் எனக்கூட்டுக.
7. பொ-ரை: நெஞ்சே! தன்னோடு வேறுபட்டு
நிற்கும் அவுணர்களின் முப்புரங்களையும் எய்தழித்த
வெற்றியோடு கூடிய வில்லை உடைய குற்றமற்றவன்
விரும்பும் ஊர் ஆகிய, மணம் நிலைபெற்று வீசும்
பொது மன்றங்களை உடைய திருநறையூருக்குச் சென்று, அங்குப்
பெருமான் எழுந்தருளிய சித்தீச்சரத்தைத் தெளிந்து
வழிபடுக.
கு-ரை: அன்றி - வேறுபட்டு. மன்றில் -
பொதுச்சபைகளில்.
8. பொ-ரை: நெஞ்சே! இராவணனது வலிமை
கெடுமாறு கயிலை மலையால் ஊன்றி அடர்த்த கால் விரலை
உடைய சிவபிரான் விரும்புவது, பரவிய புகழாளர்
வாழ்வது ஆகிய திருநறையூரில் விளங்கும் சிவபிரானது
சித்தீச்சரத்தைத் தெளிவாயாக.
கு-ரை: பரக்குங் கீர்த்தி - மேலும்
மேலும் பரவும் புகழ். திரு - சிவஞானம்.
9. பொ-ரை: நெஞ்சே! சக்கராயுதத்தை
உடைய திருமாலும், தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும்,
உணராதவனாய், ஓர்
|