திருவெண்காட்டுப் புராணம்
இருகுடங்கொண் டொருகுடத்தில் வெண்பொடி
பெண்
கொடியாக வெழுவித் தோனைத்
திருவருளாற் பாலருந்தி யேடதனை
யாற்றிலிட்ட தெய்வக் கோனை
அருமறையின் தலைக்கொழுந்தை ஆகமத்தின்
தனிமுதலை அடியார் வாழ்வைப்
பரசமய கோளரியைக் கௌணியர்சூ
ளாமணியைப் பகருவோமே.
- சைவ எல்லப்ப நாவலர்.
திருவாவடுதுறைப் புராணம்
பரசமயர் வயிறெரியத் தமிழ்ப்பதிகம்
தீயிலிட்டுப் பசுமை யாக்கிக்
கரவுடைய பொய்ச்சமணர் கழுவேறப்
பாசுரம்வை கையின்மீ தேற்றிப்
புரவலன்கூ னிமிர்த்தினிய தமிழ்நாட்டைச்
சோணாடு போலச் செய்த
சிரபுரக்கோன் சிற்றடிப்பொற் றாமரைப்போ(து)
எப்போதும் சிரமேற் கொள்வாம்.
- சாமிநாத
முனிவர்.
|