318. வலியின் மதிசெஞ்
சடைவைத் தமணாளன்
புலியின் னதள்கொண் டரையார்த் தபுனிதன்
மலியும் பதிமா மறையோர் நிறைந்தீண்டிப்
பொலியும் புனற்பூம் புகலிந் நகர்தானே.
3
319. கயலார்தடங்கண் ணியொடும்
மெருதேறி
அயலார் கடையிற் பலிகொண்டவழகன்
இயலா லுறையும் மிடமெண் டிசையோர்க்கும்
புயலார் கடற்பூம் புகலிந் நகர்தானே. 4
.__________________________________________________
கு-ரை: இது திரிபுரம் எரித்த
பெருமான் தேவியோடு எழுந்தருளியிருக்கும் இடம்
புகலி என்கின்றது. ஒன்னார் - பகைவர். வேடந்தன்னால்
- வேடத்தோடு. உறைவாவது - உறையும் இடமாவது புகலி நகர்
என்க.
3. பொ-ரை: கலைகளாகிய வலிமை குறைந்த
பிறை மதியைச் செஞ்சடைமீது வைத்துள்ள மணாளனும்,
புலியின் தோலை இடையிற் கட்டிய புனிதனும் ஆகிய
சிவபெருமான் விரும்பும் பதி மேம்பட்ட வேதியர் நிறைந்து
செறிந்து பொலியும் நீர்வளம் சான்ற அழகிய புகலி
நகராகும்.
கு-ரை: இது மதிசூடிய மணாளனாகிய, புலித்தோலரையார்த்த
பெருமான் பதி புகலி என்கின்றது. வலியில் மதி - தேய்ந்து
வலி குன்றிய பிறைமதி. தளர்ந்தாரைத் தாங்குதல்
இறைவனியல்பு என்பது உணர்த்தியவாறு. அதள் - தோல்.
4. பொ-ரை: கயல்மீன் போன்ற பெரிய
கண்களை உடைய உமையம்மையோடும் விடைமீது ஏறி, அயலார்
இல்லங்களில் பலி கொண்டருளும் அழகனாகிய
சிவபெருமான் எண்திசையிலுள்ளாரும் செவிசாய்த்து
இடி ஓசையைக் கேட்கும் கார் மேகங்கள் தங்கும்
கடலை அடுத்துள்ள அழகிய புகலிநகராகும்.
கு-ரை: இடபவாகனத்தில் அம்மையப்பராய்,
அயலார் மனைவாயிலில் பலிகொள்ளும் இறைவன்பதி
புகலி என்கின்றது. கயலார் தடங்கண்ணி - மீனாட்சி.
அயலார் - கன்மப்பிரமவாதிகளான தாருகாவனத்து
ரிஷிகள். கடை - மனைவாயில். இயலால் - அழகோடு.
|