பக்கம் எண் :

504திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


326. இரைக்கும் புனல்செஞ் சடைவைத் தவெம்மான்றன்
புரைக்கும் பொழிற்பூம் புகலிந் நகர்தன்மேல்
உரைக்குந் தமிழ்ஞான சம்பந் தனொண்மாலை
வரைக்குந் தொழில்வல் லவர்நல் லவர்தாமே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

11. பொ-ரை: ஆரவாரிக்கும் கங்கை நீரைத் தமது சிவந்த சடைமீது வைத்த எம் தலைவனாகிய சிவபிரானின், உயர்ந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய புகலிப் பதியைக் குறித்துத் தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த அழகிய இப்பதிகமாலையைத் தமதாக்கி ஓதும் தொழில் வல்லவர் நல்லவர் ஆவர்.

கு-ரை: இம்மாலை பத்தும் தனக்கே உரியதாக்கவல்லவர் நல்லவராவர் என்கின்றது. புரைக்கும் - உயர்ந்திருக்கும். வரைக்கும் தொழில் - தம்மளவினதாக்கிக் கொள்ளுந் தொழில். எழுதுவிக்கும் தொழில் என்றுமாம்; அளவுபடுத்தி யுரைக்கும் தொழில் எனவுமாம்.

திருமயிலைப் புராணம்

வீழியிதழ் மடந்தைதன்மெய் யத்தியைப்பெண்

ணரசாக்கும் வேந்தை வாவு

மாழிபுடை சூழ்மதுரை யமணிருள்கீண்

டெழுந்தசுட ரவனை யவ்வூர்

வாழிறைவன் வெப்பகல வருளமுதம்

பொழிந்தவியன் மழையை ஞானக்

காழிநகர் மறைவேந்தைக் கவுணியர்தங்

குலக்கொழுந்தைக் கருதி வாழ்வாம்.

- அமிர்தலிங்கத் தம்பிரான்.