346. முற்றா ததொர்பான் மதிசூ
டுமுதல்வன்
நற்றா மரையா னொடுமால் நயந்தேத்தப்
பொற்றோ ளியுந்தா னும்பொலிந் தழகாக
எற்றே யுறைகின் றவிடை மருதீதோ. 9
347. சிறுதே ரருஞ்சில் சமணும்
புறங்கூற
நெறியே பலபத் தர்கள்கை தொழுதேத்த
வெறியா வருகா விரிக்கோ லக்கரைமேல்
எறியார் மழுவா ளனிடை மருதீதோ. 10
348. கண்ணார் கமழ்கா ழியுண்ஞா
னசம்பந்தன்
எண்ணார் புகழெந் தையிடை மருதின்மேல்
__________________________________________________
9. பொ-ரை: முற்றாத பால் போன்ற
இளம்பிறையை முடிமிசைச் சூடிய முதல்வனாய், நல்ல தாமரை
மலர்மேல் உறையும் நான்முகனும், திருமாலும்
விரும்பித் தொழ, உமையம்மையும் தானுமாய்ச் சிவபிரான்
அழகாகப் பொலிந்து உறைகின்ற இடைமருது என்னும்
தலம் இதுதானோ?
கு-ரை: பால்மதி - பால்போல்
வெள்ளியபிறை. மால் நயந்து ஏத்த எனப் பிரிக்க.
உறைகின்ற இடைமருது ஈதோ எற்றே எனக் கூட்டுக. எற்று
எத்தன்மைத்து; என வியந்து கூறியவாறு.
10. பொ-ரை: சிறுமதியாளராகிய தேரர்களும்,
சிற்றறிவினராகிய சமணர்களும், புறங்கூறித் திரிய,
சிவபக்தர்கள் பலர் முறையாலே கைகளால் தொழுது துதிக்கப்
பகைவரைக் கொன்றொழிக்கும் மழுவை ஏந்திய சிவபிரான்
எழுந்தருளிய,. மணம் கமழ்ந்துவரும் காவிரிநதியின்
அழகிய கரைமேல் உள்ள இடைமருது என்னும் தலம் இதுதானோ?
கு-ரை: புறச்சமயிகள் புறங்கூறுகிறார்கள்;
பக்தர்கள் கைதொழுது பயன்கொள்ளுகிறார்கள் என்று
இறைவனுடைய வேண்டுதல் வேண்டாமையையும், ஆன்மாக்கள்
அவர் அவர் பரிபாகத்திற்கேற்பப் பலன் கொள்ளுகிறார்கள்
என்பதையும் அறிவித்தபடி. தேரர் - புத்தர். எறியார்
மழுவாளன் - எறியுந் தன்மைவாய்ந்த மழுவைத் தாங்கியவன்.
11. பொ-ரை: இடமகன்றதும் மணம் கமழ்வதுமான
சீகாழிப் பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் எண்ணத்தில்
நிறைந்துள்ள புகழை
|