பக்கம் எண் :

524திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


362. இடியார் குரலே றுடையெந்தை
துடியா ரிடையா ளொடுதுன்னுங்
கடியார் பொழில்சூழ் தருகாழி
அடியா ரறியா ரவலம்மே. 3

363. ஒளியார் விடமுண் டவொருவன்
அளியார் குழன்மங் கையொடன்பாய்க்
களியார் பொழில்சூழ் தருகாழி
எளிதா மதுகண் டவரின்பே. 4

364. பணியார் மலரார் தருபாதன்
முனிதா னுமையோ டுமுயங்கிக்

__________________________________________________

3. பொ-ரை: இடியை ஒத்த குரலையுடைய இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்ட எம் தந்தையாகிய இறைவன், துடி போலும் இடையினை உடைய உமையம்மையோடு எழுந்தருளியிருப்பதும், மணம் பொருந்திய பொழில்களால் சூழப்பட்டதுமான சீகாழிப் பதியை வணங்கும் அடியவர்கள், துன்பத்தை அறியார்கள்.

கு-ரை: இது காழி அடியார் அவலம் அறியார் என்கின்றது. இடியார் குரல் ஏறு - இடியையொத்த குரலுடைய இடபம். துடி - உடுக்கை, எந்தை துன்னும் காழி அடியார் அவலம் அறியார் எனக்கூட்டுக.

4. பொ-ரை: நீலநிற ஒளியோடு கூடிய ஆலகால விடத்தை உண்டருளிய ஒப்பற்றவனாகிய சிவபிரான், வண்டுகள் மணத்தைத் தேடி வந்து நாடும் கூந்தலை உடைய உமையம்மையோடு, அன்புடன் களிக்கும், பொழில்கள் சூழ்ந்த காழிப்பதியைக் கண்டவர்க்கு இன்பம் எளிதாம்.

கு-ரை: இது காழி கண்டவர்க்கு இன்பம் எளிதாம் என்கின்றது. ஒளியார் விடம் - நீலஒளியோடுகூடிய விடம். அளி - வண்டு. ஒருவன் மங்கையொடு அன்பாய்க் களி ஆர் காழி கண்டவர் இன்பம் எளிதாம் என முடிவு செய்க.

5. பொ-ரை: தண்மை பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடிகளை உடைய சிவபெருமான் உமையம்மையோடு கூடி உலக