பக்கம் எண் :

 34. சீகாழி525


கனியார் பொழில்சூழ் தருகாழி
இனிதா மதுகண் டவரீடே 5

365. கொலையார் தருங்கூற் றமுதைத்து
மலையான் மகளோ டுமகிழ்ந்தான்
கலையார் தொழுதேத் தியகாழி
தலையாற் றொழுவார் தலையாரே. 6

366. திருவார் சிலையா லெயிலெய்து
உருவா ருமையோ டுடனானான்
கருவார் பொழில்சூழ் தருகாழி
மருவா தவர்வான் மருவாரே. 7

__________________________________________________

உயிர்கட்குப் போகத்தைப் புரிந்தருளினும், தான் முனிவனாக விளங்குவோன். அத்தகையோன் எழுந்தருளியதும் கனிகள் குலுங்கும் பொழில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப் பதியைச் சென்று கண்டவர்க்குப் பெருமை எளிதாக வந்தமையும்.

கு-ரை: இது காழி கண்டவர் பெருமை எய்துவர் என்கின்றது. பனி - குளிர்மை. பனியார் மலர் - தாமரை மலர். ஆர் தரு - ஒத்த. உமையோடு முயங்கி முனிதான் - ஒருத்தியோடு கூடியிருந்தும் தான் முனிவனாய் இருப்பவன். பாதன் முனி காழி கண்டவர் ஈடு இனிதாம் என முடிக்க.

6. பொ-ரை: கொலைத் தொழில் நிறைந்த எமனை உதைத்து அழித்து மலையரையன் மகளாகிய உமையம்மையோடு மகிழ்ந்து உறைபவனாகிய சிவபெருமான் விரும்புவதும், மெய்ஞ்ஞானியர் தொழுதேத்துவதுமாகிய சீகாழிப் பதியைத் தலையால் வணங்குவார் தலையாயவராவார்.

கு-ரை: இது காழிக்குச் சிரம்பணிவார் மேலானவர் என்கின்றது. கலையார் - கலைஞானிகள்.

7. பொ-ரை: அழகிய வில்லால் மூவெயில்களை எய்தழித்து எழில் தவழும் உமையம்மையோடு உடனாய் விளங்கும் சிவபெருமான் எழுந்தருளியிருப்பதும், கருநிறம் பொருந்திய சோலைகளால் சூழப் பெற்றுதுமான சீகாழிப் பதியை அடையாதவர் விண்ணுலக இன்பங்களை அடையாதவராவர்.