367. அரக்கன் வலியொல்
கவடர்த்து
வரைக்கும் மகளோ டுமகிழ்ந்தான்
சுரக்கும் புனல்சூழ் தருகாழி
நிரக்கும் மலர்தூ வுநினைந்தே. 8
368. இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான்
உருவிற் பெரியா ளொடுசேருங்
கருநற் பரவை கமழ்காழி
மருவப் பிரிபும் வினைமாய்ந்தே. 9
__________________________________________________
கு-ரை: இது காழியடையார் வான் அடையார்
என்கின்றது. திருவார் சிலை - அழகிய வில்; என்றது
பொன் வில்லாதலின் உரு - அழகு.
கருவார் பொழில் - கருமையாகிய சோலை.
மருவாதவர் - அடையாதவர்.
8. பொ-ரை: இராவணனது வலிமை
சுருங்குமாறு அவனைத் தளர்ச்சியெய்த அடர்த்து
மலைமகளோடு மகிழ்ந்த சிவபிரான் விளங்குவதும்
மேலும் மேலும் பெருகிவரும் நீர் சூழ்ந்ததுமான சீகாழிப்
பதியை நினைந்து வரிசையான மலர்களைத் தூவுமின்.
கு-ரை: இது காழிக்கு மலர் தூவுங்கள்
என்கின்றது. அரக்கன் வலி அடர்த்து வரைக்குமகளோடு
மகிழ்ந்தான் என்பது. அரக்கன் மலையெடுக்க, உமையாள்
எய்திய அச்சத்தைப் போக்கியதும், அவன் செய்த
தவற்றிற்காக அவள் காணத் தண்டித்தமையும்
விளக்கிநின்றது. ஒல்க - சுருங்க. நிரக்கும் - ஒழுங்கான.
9. பொ-ரை: திருமால் பிரமன் ஆகிய
இருவர் பொருட்டு எரிஉருவாகி நிமிர்ந்த சிவபிரான்
அழகிற்சிறந்த பெரியநாயகி அம்மையோடு எழுந்தருளியிருப்பதும்
கரிய நல்ல கடலின் மணம் கமழ்வதுமான சீகாழிப் பதியை
மனத்தால் நினைய நம் வினைகள் மாய்ந்து பிரியும்.
கு-ரை: இது காழியையடைய வினைகெடும்
என்கின்றது. இருவர் - மாலுமயனும். உருவிற் பெரியாள்
- பெரியநாயகி என்னும் திருத்தோணிச் சிகரத்திருக்கும்
அம்மையார். பரவை - கடல்.
|