369. சமண்சாக் கியர்தா
மலர்தூற்ற
அமைந்தா னுமையோ டுடனன்பாய்க்
கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி
சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே. 10
370. நலமா கியஞானசம்பந்தன்
கலமார் கடல்சூழ் தருகாழி
நிலையா கநினைந் தவர்பாடல்
வலரா னவர்வா னடைவாரே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
10. பொ-ரை: சமணர்களும் சாக்கியர்களும்
புறங்கூற, உமையம்மையோடு ஒருசேர அன்பாய்ச் சிவபிரான்
எழுந்தருளியிருப்பதும், மணம் கமழ்ந்து நிறையும்
பொழில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப் பதியைத் தம்
மனத்தே தியானித்து, மலர் தூவித் தொழுதலே சிறந்த
தொண்டாகும்.
கு-ரை: இது சமண் முதலியோர் அலர்
தூற்ற அடியார் மலர் தூவுதல் தொண்டு என்கின்றது.
அலர்தூற்ற - பழி சொல்ல. உமையோடு உடன் அன்பாய்
அமர்ந்தான். அம்மையொடு ஒருசேர ஆசனத்து அன்பாய்
அமர்ந்தான் என்க. காழி சுமந்தார் - காழியைத் தம்
மனத்துத் தியானித்தவர்கள்.
11. பொ-ரை: நன்மையை மக்கட்கு நல்குவதும்
மரக்கலங்களை உடைய கடலால் சூழப் பெற்றதுமான சீகாழிப்
பதியை உறுதியாக நினைந்தவர்களும், ஞானசம்பந்தரின்
பாடல்களில் வல்லவராய் ஓதி வழிபட்டவர்களும் விண்ணக
இன்பங்களை அடைவர்.
கு-ரை: காழியைத் தமது நிலைத்த இடமாக
நினைந்த பெருமானது பாடலில் வல்லவர்கள் வானடைவர்
என முடிக்க.
|