பக்கம் எண் :

532திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை
தெருள்செய் தவர்தீ வினைதேய்வே. 9

380. துளங்குந் நெறியா ரவர்தொன்மை
வளங்கொள் ளன்மின்புல் லமண்டேரை
விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை
உளங் கொள் பவர்தம் வினையோய்வே. 10

381. நளிர்கா ழியுண்ஞா னசம்பந்தன்
குளிரார் சடையா னடிகூற
மிளிரார் பொழில்வீ ழிம்மிழலை
கிளர்பா டல்வல்லார்க் கிலைகேடே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

நின்று வெருட்டியவனும் பின் அவர்க்கு அருள் செய்தவனுமான சிவபிரான் எழுந்தருளிய திருவீழிமிழலையைச் சிறந்த தலம் என்று தெளிந்தவர்கள் தீவினைகள் தேய்தல் உறும்.

கு-ரை: இத்தலத்தைத் தெளிந்தவர்களது தீவினை தேயும் என்கின்றது. இருவர் மருள்செய்து மயலாக - மாலும் அயனும் அஞ்ஞானத்தால் மயங்க. வெருள்செய்தவன் - வெருட்டியவன், தெருள்செய்தவர் - தெளிந்தவர்கள்.

10. பொ-ரை: தடுமாற்றமுறும் கொள்கைகளை மேற் கொண்டுள்ள அற்பமானவராய அமணர் தேரர் ஆகியோரின் சமயத்தொன்மைச் சிறப்பைக் கருதாதீர். விளங்கும் பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையை நினைபவர்களின் வினைகள் ஓய்தலுறும்.

கு-ரை: இத்தலத்தைத் தியானிப்பவர்களின் வினை ஓயும் என்கின்றது. துளங்கும் நெறியார் - அளவைக்கும் அநுபவத்திற்கும் நிலைபெறாது அசையும் சமயநெறியை யுடையவர்கள். தேரை - தேரரை என்பதன் சிதைவு.

11. பொ-ரை: குளிர்ந்த காழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் தண்மையான சடைமுடியை உடைய சிவபிரானுடைய திருவடிப் பெருமைகளைக் கூறத் தொடங்கி விளக்கமான பொழில்கள்