பக்கம் எண் :

 35. திருவீழிமிழலை531


377. செறியார் கழலுஞ் சிலம்பார்க்க
நெறியார் குழலா ளொடுநின்றான்
வெறியார் பொழில்வீ ழிம்மிழலை
அறிவா ரவலம் மறியாரே. 7

378. உளையா வலியொல் கவரக்கன்
வளையா விரலூன் றியமைந்தன்
விளையார் வயல்வீ ழிம்மிழலை
அளையா வருவா ரடியாரே. 8

379. மருள்செய் திருவர் மயலாக
அருள்செய் தவனா ரழலாகி

__________________________________________________

கு-ரை: இது இத்தலத்தை அடைவாரே அடியார் என்கின்றது. சரி - இயங்குகின்ற. பைங்கண் - பசியகண். பசுமை ஈண்டு இளமை குறித்து நின்றது-

7. பொ-ரை: கால்களிற் செறிந்த கழல், சிலம்பு ஆகிய அணிகள் ஆர்க்கச் சுருண்ட கூந்தலை உடைய உமையம்மையோடு நின்றருளும் சிவபிரான் எழுந்தருளியதும் மணம் கமழும் பொழிலகளால் சூழப்பெற்றதுமான திருவீழிழலையைத் தியானிப்பவர் அவலம் அறியார்.

கு-ரை: இது இத்தலத்தை யறிவார், துன்பம் அறியார் என்கின்றது. செறி - வளை. செறி ஆர் கழலும் சிலம்பு ஆர்க்க என்பதில் எண்ணும்மையை ஏனையவிடத்தும் கூட்டுக. நெறியார் குழல் - சுருண்ட கூந்தல், அறிவார் - தியானிப்பார்கள்.

8. பொ-ரை: மிக வருந்திக் கயிலை மலையைப் பெயர்த்த இராவணனது வலிமை கெடுமாறு தன் காலை வளைத்து விரலால் ஊன்றிய வலிமை வாய்ந்த சிவபிரான் எழுந்தருளியதும், விளைவு மிகுந்த வயல்களை உடையதுமான திருவீழிமிழலையை நினைந்து வருபவர் சிறந்த அடியவராவர்.

கு-ரை: இத்தலத்தை நெருங்குவாரே அடியார் என்கின்றது. உளையா - வருந்தி. அளையா - அளைந்து; பொருந்தி. உளையா வலி - பண்டு வருந்தா வலிமையுமாம்.

9. பொ-ரை: திருமால் பிரமன் ஆகிய இருவரும் அஞ்ஞானத்தினால் அடிமுடிகாணாது மயங்க, அரிய அழலுருவாய் வெளிப்பட்டு