பக்கம் எண் :

530திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


விரவும் பொழிலவீ ழிம்மிழலை
பரவும் மடியா ரடியாரே. 4

375. கரிதா கியநஞ் சணிகண்டன்
வரிதா கியவண் டறைகொன்றை
விரிதார் பொழில்வீ ழிம்மிழலை
உரிதா நினைவா ருயர்வாரே. 5

376. சடையார் பிறையான் சரிபூதப்
படையான் கொடிமே லதொர்பைங்கண்
விடையா னுறைவீ ழிம்மிழலை
அடைவா ரடியா ரவர்தாமே. 6

__________________________________________________

சூழ்ந்ததுமான திருவீழிமிழலையைப் பரவித் துதிக்கும் அடியவரே அடியவராவர்.

கு-ரை: இது வீழிமிழலையைத் தொழும் அடியாரே அடியார் என அடியார் இயல்பை விளக்குகின்றது. உரவம் - வலிமை.

5. பொ-ரை: கரியதாகிய நஞ்சினை உண்டு அதனை அணியாக நிறுத்திய நீலகண்டன் எழுந்தருளியதும், வரிகளை உடைய வண்டுகள் ஒலி செய்யும் கொன்றை மரங்கள் விரிந்த மாலைபோலக் கொத்தாக மலரும் சோலைகளால் சூழப்பெற்றதும் ஆகிய திருவீழிமிழலையைத் தமக்கு உரிய தலமாகக் கருதுவோர் சிறந்த அடியவராவர்.

கு-ரை: இது இத்தலத்தை உரிமையோடு நினைவார் உயர்வார் என்கின்றது. வரிதாகிய வண்டு - வரிகனையுடையதாகிய வண்டு ‘பொறிவரி வண்டினம்‘ என்பது காண்க. உரியதா என்பது உரிதா எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது, உரித்து உரிது போலவும், வரித்து வரிது போலவும் என்க.

6. பொ-ரை: சடைமிசைச்சூடிய பிறைமதியை உடையவனும், இயங்கும் பூதப் படைகளை உடையவனும், கொடிமேல் பசிய கண்களை உடைய ஒற்றை விடையேற்றை உடையவனுமாகிய சிவபெருமான் உறையும் திருவீழிமிழலையை அடைபவர்கள் சிறந்த அடியவர்கள் ஆவர். தாம், ஏ அசைநிலை.