386. உமையா ளொருபா கமதாகச்
சமைவா ரவர்சார் விடமாகும்
அமையா ருடல்சோர் தரமுத்தம்
அமையா வருமந் தணையாறே. 5
387. தலையின் றொடைமா லையணிந்து
கலைகொண்ட டதொர்கை யினர்சேர்வாம்
நிலைகொண் டமனத் தவர்நித்தம்
மலர்கொண் டுவணங் குமையாறே . 6
388. வரமொன் றியமா மலரோன்றன்
சிரமொன் றையறுத் தவர்சேர்வாம்
வரைநின் றிழிவார் தருபொன்னி
அரவங்கொடுசே ருமையாறே. 7
_________________________________________________
மக்கள் கண்ணுக்கு மறைந்து வதியும் தேவர்கள்.
தம்மில் அறையும் ஒலி - தமக்குள் பேசிக்கொள்ளும்
ஒலி.
5. பொ-ரை: உமையம்மை ஒருபாகத்தே
விளங்கப் பொருந்தியவராகிய சிவபெருமான் சாரும்
இடம், மலையிடையே உள்ள மூங்கில்கள் முத்துக்களைச்
சொரிய அவை காவிரியாற்றில் பொருந்தி வரும்
குளிர்ந்து திருவையாறாகும்.
கு-ரை: சமைவார் - பொருந்தியவர்.
அமையார் உடல் சோர்தர - மூங்கிலினது உடல் வெடிக்க.
அமையா - பொருந்தி.
6. பொ-ரை: தலையோட்டினால் தொகுக்கப்பட்டுள்ள
மாலையை அணிந்து மானைக் கையின்கண் கொண்டவராகிய
சிவபிரானது இடம், இறைவன் திருவடிக்கண் நிலைத்த
மனமுடையவராகிய அடியவர் நாள்தோறும் மலர்கொண்டு
தூவி வழிபாடு செய்யும் திருவையாறாகும்.
கு-ரை: கலை - மான். நிலைகொண்ட
மனத்தவர் என்றது. இறைவனது திருவடியின் கண் நிலைத்த
மனமுடைய அடியார்களை,
7. பொ-ரை: வரங்கள் பல பெற்ற தாமரை
மலர்மேல் விளங்கும் பிரமனின் தலைகளில் ஒன்றை
அறுத்த சிவபிரானது இடம், மலை
|