பக்கம் எண் :

 37. திருப்பனையூர்537


389. வரையொன் றதெடுத்த தவரக்கன்
சிரமங் கநெரித் தவர்சேர்வாம்
விரையின் மலர்மே தகுபொன்னித்
திரைதன் னொடுசே ருமையாறே. 8

390. சங்கக் கயனு மறியாமைப
பொங்குஞ் சுடரா னவர்கோயில்
கொங்கிற் பொலியும் புனல்கொண்டு
அங்கிக் கெதிர்காட் டுமையாறே. 9

__________________________________________________

யினின்று இழிந்துபெருகி வரும் காவிரி நதி ஆரவாரித்து வரும் திருவையாறு ஆகும்.

கு-ரை: வரம் ஒன்றிய - வரம் பெற்ற. மேன்மைபொருந்திய என்றுமாம். சேர்வு - இடம். வரைநின்று இழிவார்தரு பொன்னி எனப் பிரிக்க. வார்தரு - ஒழுகுகின்ற. அரவம் - ஒலி, பொன்னி - காவிரி.

8. பொ-ரை: கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் சிரங்களும் பிறஅங்கங்களும் சிதறுமாறு நெரித்த சிவபிரான் எழுந்தருளிய இடம். மணம் பொருந்திய மலர்களைக் கொண்டு புண்ணிய நதியாகி காவிரி அலைகளோடு கூடிப் பாய்ந்து வளம் சேர்க்கும் திருவையாறு ஆகும்.

கு-ரை: விரை - மணம். சிரம் அங்கம் - தலையும் பிற அங்கங்களும்.

9. பொ-ரை: சங்கத்தைக் கையின்கண் கொண்ட திருமாலும் அறியாதவாறு பொங்கி எழும் சுடராகத் தோன்றிய சிவபிரான் உறையும் கோயில், காவிரி, மகரந்தம், தேன் ஆகியன பொலியும் நீரைக் கொண்டு வந்து, அழல் வடிவான இறைவன் திருமுன் அர்க்கியமாகக் காட்டும் திருவையாறாகும்.

கு-ரை: சங்கக்கயன் - சங்கத்தைக் கையிலேயுடைய திருமால், கொங்கு - தேன்.

அங்கிக்கு எதிர்காட்டும் - காலையில் அக்கினி காரியம் செய்வோர் அர்க்கியம் சமர்ப்பிக்கும்.