பக்கம் எண் :

544திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


தருவனவாகப் போற்றிப் பாடிய சொன்மாலைகளான இப்பத்துப் பாடல்களையும் ஒவ்வோரூரிலும் இருந்துகொண்டு நினைவார் உயர்வெய்துவர்.

கு-ரை: பனையூர் மாலை பத்தையும் வல்லவர்கள் உயர்வார் எனப் பயன்கூறுகிறது. பார் - பூமி. ஆராத - கேட்டு அமையாத; அதாவது மேன்மேலும் விருப்பத்தை விளைவிக்கக்கூடிய. ஊர் ஊர் நினைவார் - பொலிகின்றவன் ஊர், மகிழ்ந்தவன் ஊர் என்பன முதலியவாக முடிவனவற்றை நினைவார்.

திருக்குற்றாலப் புராணம்

மதுரேசர் திருநாட்டு வந்தசமண்

கழுவேற மாறாச் சைவம்

சதுரேற மனுநீதி தழைத்தேறத்

திருவேடு தமிழ்சேர் வைகை

யெதிரேறத் தொண்டர்குழா மீடேறப்

பரசமய இருள்விட் டோடக்

கதிரேறு மணிச்சிவிகை யேறினான்

சரணமந்தக் கரணம் சேர்ப்பாம்.

-திரிகூடராசப்பக்கவிராயர்.

மருதவனப் புராணம்

சிவஞானக் கடலருந்திக் கருமைகொடு

திசைகளெங்குந் தெரியமின்னித்

தவரினஞ்சூழ்ந் திடவுலக முணரவிடித்

தமண்கோடை தணப்ப வோங்கு

புவனமதிற் சைவநெடும் பயிர்தழைப்பப்

பரங்கருணைப் பொருப்பின்மீது

கவிமழைகள் சொரிபுறவக் கவுணியக்கொண்

டலைநாளுங் கருத்துள் வைப்பாம்.

-சிவக்கொழுந்து தேசிகர்.