பிரமன் னொடுமா லறியாத
பரமன் னுறையும் பனையூரே. 9
402. அழிவல் லமண ரொடுதேரர்
மொழிவல் லனசொல் லியபோதும்
இழிவில் லதொர்செம் மையினானூர்
பழியில் லவர்சேர் பனையூரே. 10
403. பாரார் விடையான் பனையூர்மேல்
சீரார் தமிழ்ஞா னசம்பந்தன்
ஆரா தசொன்மா லைகள்பத்தும்
ஊரூர் நினைவா ருயர்வாரே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
திருமுன் தலை தாழ்த்தி வணங்குங்கள்; எளிதில்
நல்வரம் பெறலாம். பிரமனும் திருமாலும் அறியாத அப்பரமன்
உறையும் ஊர் திருப்பனையூராகும்.
கு-ரை: இது வரம் வேண்டியவர்கள்
பனையூரைச் சிரந்தாழ வணங்குங்கள் என்கின்றது.
முன்னி - எண்ணி. வணங்கும் - வணங்குங்கள்; செய்யுமென்
முற்று.
10. பொ-ரை: அழிதலில் வல்ல அமணர்களும்
பௌத்தர்களும் வாய்த்திறனால் புறங்கூறிய
போதும் குறைவுறாத செம்மையாளனாகிய சிவபெருமானது
ஊர் பழியற்றவர் சேரும் திருப்பனையூராகும்.
கு-ரை: இது புறச்சமயிகள் பொருந்தாதன
சொல்லியபோதும் அவற்றால் இழிவுபடாத இறைவனூர்
பனையூர் என்கின்றது. அழிவல் அமணர் - அழிதலில்வல்ல
சமணர்கள். தேரர் - புத்தர். மொழி வல்லன - வாய்
வன்மையாற் சொல்லும் மொழிகளை. இழிவு - குறைபாடு.
11. பொ-ரை: மண்ணுலகிற்
பொருந்தி வாழ்தற்கு ஏற்ற விடை ஊர்தியைக் கொண்ட
சிவபெருமானது திருப்பனையூரின் மேல் புகழால் மிக்க
தமிழ் ஞானசம்பந்தன் மென்மேலும் விருப்பத்தைத்
|