பக்கம் எண் :

542திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


399. அடையா தவர்மூ வெயில்சீறும்
விடையான் விறலார் கரியின்றோல்
உடையா னவனெண் பலபூதப்
படையா னவனூர் பனையூரே. 7

400. இலகும் முடிபத் துடையானை
அலல்கண் டருள்செய் தவெம்மண்ணல்
உலகில் லுயிர்நீர் நிலமற்றும்
பலகண் டவனூர் பனையூரே. 8

401. வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள்
சிரமுன் னடிதா ழவணங்கும்

__________________________________________________

7. பொ-ரை: தன்னை வணங்காத பகைவர்களான அசுரர்களின் மூன்று அரண்களையும் அழித்த விடையூர்தியனும், வலிய யானையை உரித்து அதன் தோலை மேல் ஆடையாகக் கொண்டவனும் எண்ணற்ற பல பூதப் படைகளை உடையவனுமான சிவபெருமானது ஊர் திருப்பனையூராகும்.

கு-ரை: இது வீரன் மேவும் ஊர் பனையூர் என்கின்றது. அடையாதவர் - பகைவராகிய திரிபுராதிகள் சீறும் என்ற பெயரெச்சம் விடை உடையானை விசேடித்தது. விறல் - வலிமை.

8. பொ-ரை: விளங்கும் முடி பத்தை உடைய இராவணனை அடர்த்து அவன்படும் அல்லல் கண்டு அவனுக்கு அருள் செய்த எம் அண்ணலும், உலகின்கண் உயிர்கட்கு நீர் நிலம் முதலான பலவற்றையும் படைத்தளித்தவனும் ஆகிய சிவபெருமானது ஊர் திருப்பனையூர்.

கு-ரை: ஐம்பூதங்களையும் ஆக்கிய இறைவனூர் பனையூர் என்கின்றது. அலல் - துன்பம்; அல்லல் என்பதன் திரிபு. மற்றும் பல என்றமையான் நுண்பூதங்களும், தன்மாத்திரைகளும் ஆகிய அனைத்தையுங் கண்டவன்.

9. பொ-ரை: சிவபெருமானிடம் வரங்களைப்பெறுதலை எண்ணி மகிழ்வோடு புறப்பட்டு வரும் அடியவர்களே, அப்பெருமான்