397. அறையார் கழன்மே லரவாட
இறையார் பலிதேர்ந் தவனூராம்
பொறையார் மிகுசீர் விழமல்கப்
பறையா ரொலிசெய் பனையூரே. 5
398. அணியார் தொழவல் லவரேத்த
மணியார் மிடறொன் றுடையானூர்
தணியார் மலர்கொண் டிருபோதும்
பணிவார் பயிலும் பனையூரே. 6
__________________________________________________
இடியார் கடல் - கரைகளை மோதுகின்ற
கடல். பொடி - விபூதி. படியார் - பூமியிலுள்ள பிறமக்கள்.
5. பொ-ரை: ஒலிக்கின்ற வீரக்கழல்
மேல் அரவு ஆட முன்கைகளில் பலியேற்றுத் திரியும்
பிட்சாடனராகிய சிவபெருமானது ஊர், மண்ணுலகில் சிறந்த
புகழை உடைய திருவிழாக்கள் நிறையப் பறைகளின் ஒலி
இடைவிடாது பயிலும் திருப்பனையூராகும்.
கு-ரை: இது பிட்சாடனமூர்த்தியின்
ஊர் பனையூர் என்கின்றது. அறை - ஒலி. இறை - முன்கை.
பொறையார் மிகுசீர் விழமல்க - பூமியிற்
சிறந்த புகழினையுடைய திருவிழா நிறைய. "பொறைதரத்
திரண்டதாரு" இரகுவம்சம் - தசரதன் சாப. 40.
6. பொ-ரை: தம்மைப் பூசனை செய்து
தொழவல்ல அடியவர்கள் அண்மையில் இருப்பவராய்,
அருகிருந்து ஏத்துமாறு உள்ள நீலமணிபோலும் கண்டத்தை
உடைய சிவபெருமானது ஊர், தன்னைப் பணியும் அடியவர்
குளிர்ந்த மலர்களைக் கொண்டு இருபோதும் தூவி வழிபடும்
இடமான திருப்பனையூராகும்.
கு-ரை: நீலகண்டனது உறைவிடம்
பனையூர் என்கின்றது. தொழவல்லவர் அணியார் ஏத்த
என மாறுக.
அணியார் - அண்மையில் உள்ளவர்கள்.
மணி - நீலமணி. தணி ஆர் மலர் கொண்டு - குளிர்ந்த
மலரையுங்கொண்டு. ‘பூவும் நீரும் கொண்டு‘ என்பதனை
நினைவு கூர்க. தணி - தண்மை.
|