509. கண்ணுமூன்று முடையதன்றிக்
கையினில் வெண்மழுவும்
பண்ணுமூன்று வீணையோடு
பாம்புடன் வைத்தலென்னே
எண்ணுமூன்று கனலுமோம்பி
யெழுமையும் விழுமியராய்த்
திண்ணமூன்று வேள்வியாளர்
சிரபுர மேயவனே. 6
510. குறைபடாத வேட்கையோடு
கோல்வளை யாளொருபாற்
பொறைபடாத வின்பமோடு
புணர்தரு மெய்ம்மையென்னே
கு-ரை: திரிபுரம் எரித்த தேவரீர்
யானையை உரித்தது ஏன் என்கின்றது. பெற்றி - தன்மை.
கரம் எடுத்து - கையால் தூக்கி, மரம் உரித்த தோல்
- மரவுரி. தேவரும் முனிவரும் கை தலைமேல் கூப்பி வணங்கும்
சிரபுரமேயவன் என்க.
6. பொ-ரை: ஆகவனீயம், காருகபத்தியம்,
தக்ஷிணாக்கினி என்று எண்ணப்படும் முத்தீயையும் வேட்பதுடன்
எழு பிறப்பிலும் தூயவராய் உறுதிப்பாட்டுடன் தேவ
யாகம், பிதிர் யாகம், இருடி யாகம் ஆகிய மூன்று
வேள்விகளையும் புரியும் அந்தணாளர் வாழும்
சிரபுரம் மேவிய இறைவனே; முக்கண்களை உடையவனாய்க்
கைகளில் வெண் மழு, பண் மூன்றுடைய வீணை, பாம்பு ஆகியன
கொண்டுள்ள காரணம் யாதோ?
கு-ரை: மூன்று கண்ணுடைய முதல்வராகிய
தேவரீர் மழு, வீணை, பாம்பு, இவற்றை வைத்தது ஏன் என்கின்றது.
பண் மூன்று - பண், திறம், திறத் திறம் என்பன.
இறைவன் திருக்கரத்தில் வீணையுண்மை ‘எம்மிறை நல்வீணை
வாசிக்குமே‘ என்ற பகுதியாலும் அறிக. எண்ணும் - எண்ணப்படுகின்ற.
மூன்று கனல் - ஆகவனீயம், தட்சிணாக்கினி, காருகபத்யம்
என்பன. மூன்று வேள்வியாளர் - தேவயஞ்ஞம், பிதிர்யஞ்ஞம்,
ருஷியஞ்ஞம் என்னும் மூன்று வேள்விகளையும் செய்பவர்கள்.
7. பொ-ரை: சிறிதும் சாயாத மெல்லிய
தனங்களை உடைய இளமகளிர் மாளிகைகளின் மேல்
இருந்து குற்றமற்ற பாடல்களைப் பாடும்
|