பக்கம் எண் :

 54. திருவோத்தூர்673


* * * * * * * 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

இழந்து திரிவாரின் தவவேடம் பெருமை தருவதாகும் எனக் கருதும் பிரமபுரத்தலைவனான் ஞானசம்பந்தன்...

கு-ரை: பித்தர் வேடம் பெருமை என்னும் - சிவபோத மிகுதியால் பித்தரைபோல இருப்பார் வேடம் பெருமைதருவதாகும் என்னும்.

சீகாழிப் புராணம்

குழுவேறச் சமண்மூகர் அழலேற

விடுத்ததனைக் கூடற் கோமான்

வழுவேறு முடலேற வுடன்முரணும்

மனமுரணும் மாற்றி அன்னார்

கழுவேற வெண்ணீறும் ஐந்தெழுத்தும்

விரித்துலகைக் கதியி லேற்றி

மழுவேறும் கரத்தான்றன் அருளேறும்

கவுணியர்கோன் மலர்த்தாள் போற்றி.

- சுப்பையாப்பிள்ளை.

திருஆப்பனூர்ப் புராணம்

பெருமுலைப்பால் அகன்பிரமன்

கண்டறியாப் பெருந்தகைமேல்

பொருமுலைப்பான் மெழுகினுளம்

புரைந்துருகத் தமிழ்பாடும்

அருமுலைப்பால் அரும்பனைய

மணிமுறுவல் மலைமகளார்

திருமலைப்பால் மணங்கமழ்வாய்ச்

செல்வனையாம் பரவுவாம்.

-கந்தசாமிப்புலவர்.