581. இடையீர் போகா விளமுலை யாளையோர்
புடையீரேபுளிள் மானுரி
உடையீ ரேயும்மை யேத்துது மோத்தூர்ச்
சடையீ ரேயும தாளே. 2
582. உள்வோர் போல நொடிமையி னார்திறம்
கொள்வீ ரல்குலோர் கோவணம்
ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்
கள்வீ ரேயும காதலே. 3
__________________________________________________
கு-ரை: ஓத்தூர் மேயகூத்தரே, பூவேந்தி
உம் பொன்னடி போற்றாதார் இல்லை என்கின்றது.
பூதேர்ந்து - வண்டு, ஈக்கடி எச்சம், முடக்கு முதலிய
குற்றமில்லாத பூக்களை ஆராய்ந்து. ஆயன - பூசைக்கு
வேண்டிய உபகரணங்கள்.
2. பொ-ரை: திருஓத்தூரில் சடைமுடியோடு
விளங்கும் இறைவரே, ஈர்க்கு இடையில் செல்லாத
நெருக்கமான இளமுலைகளை உடைய உமையம்மையை ஒரு
பாகமாகக் கொண்டவரே, புள்ளிமான் தோலை ஆடையாக
உடுத்தியவரே, உம் திருவடிகளை நாங்கள்
வணங்குகிறோம்.
கு-ரை: இள முலையுமையாள் பாகரே,
மான்தோல் உடையீரே, உம்மை வணங்கிறோம்
என்கின்றது. இடையீர் போகா இள முலை - இரண்டு
முலைகளுக்கும் இடையில் ஈர்க்கு நுழையாத இளமுலை.
‘ஈர்க்கிடைபோகா இளமுலை’ என்ற திருவாசகமும்
நோக்குக. புடையீர் - பக்கத்துடையவரே!
3. பொ-ரை: ஒளிசிறந்த வாழைக்
கனிகள் தேன் போன்ற சாற்றைச் சொரியும்
திருவோத்தூரில் அரையிற் கோவணம்
உடுத்தியவராய் விளங்கும் கள்வரே, உம் காதல் மிக
நன்று. பொய் பேசும் இயல்பினராய் அடியார்களை
நினைப்பவரைப் போலக் காட்டி அவரை ஏற்றுக்
கொள்வீர்.
கு-ரை: ஓத்தூர்க் கள்ளரே! உம்முடைய
காதல் நன்றாயிருக்கிறது என்கின்றது. உள்வேர்
போல - நினைப்பரர்போல. உள்வீர் என்பது பாடம்.
நொடிமையினார்திறம் - பொய்யாகப் பேசுபவருடைய
தன்மையை. அல்குல் - அரை.
|