பக்கம் எண் :

676திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


583. தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை
ஆட்டீ ரேயடி யார்வினை
ஓட்டீ ரேயும்மை யேத்துது மோத்தூர்
நாட்டீ ரேயரு ணல்குமே. 4

584. குழையார் காதீர் கொடுமழு வாட்படை
உழையாள் வீர்திரு வோத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்
அழையா மேயரு ணல்குமே. 5

585. மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்
தக்கார் தம்மக்க ளீரரென்
றுட்கா தாருள ரோதிரு வோத்தூர்
நக்கீ ரேயரு ணல்குமே. 6

__________________________________________________

4. பொ-ரை: செங்காந்தட்பூவை அணிந்தவரே! படப்பொறிகளை உடைய ஐந்து தலை நாகத்தை ஆட்டுபவரே! அடியவர் வினைகளை ஓட்டுபவரே! திருவோத்தூர் நாட்டில் எழுந்தருளியவரே! உம்மைத் துதிக்கின்றோம்; அருள்புரிவீராக.

கு-ரை: உம்மை ஏத்துவோம்; அருளும் என்கின்றது. தோட்டீர் - செங்காந்தள் பூவையணிந்தவரே. துத்தி - படப்பொறி.

5. பொ-ரை: குழையணிந்த காதினை உடையவரே, கொடிய மழு என்னும் வாட்படையை ஒருபாலுள்ள கரத்தில் ஏந்தி ஆள்பவரே. திருவோத்தூரில் பிழை நேராதபடி வண்ணப் பாடல்கள் பல பாடி நின்று ஆடும் அடியார்க்கு அழையாமலே வந்து அருள் நல்குவீராக.

கு-ரை: பாடி, ஆடும் அடியார்களுக்கு அவர்கள் அழையாமலே வந்து அருளும் என்கின்றது. உழை - பக்கம். பிழையா - தவறாதபடி. வண்ணங்கள் - தா அவண்ணம் முதலிய வண்ணப்பாடல்கள். அழையாமே நல்கல் முதல்வள்ளல் ஆவார் கடமையென்று விண்ணப் பித்தவாறு.

6. பொ-ரை: திருவோத்தூரில் மகிழ்ந்து உறையும் இறைவரே, நீர் பலி கொள்ள வருங்காலத்து, உம் திருமுன் அன்பு மிக்கவராய்