586. தாதார் கொன்றை தயங்கு முடியுடை
நாதா வென்று நலம்புகழ்ந்
தோதா தாருள ரோதிரு வோத்தூர்
ஆதீ ரேயரு ணல்குமே. 7
587. என்றா னிம்மலை யென்ற வரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதி லெய்தவ் னோத்தூர்
என்றார் மேல்வினை யேகுமே. 8
__________________________________________________
விரும்பி வந்து பலியிடுதற்குத் தம்
மக்களுள் மகளிரை அனுப்புதற்கு அஞ்சாத தந்தை
தாயர் உளரோ? எவ்வாறேனும் ஆக, அவர் தமக்கு அருள்
நல்குவரராக.
கு-ரை: நீர் பலியேற்க வந்தகாலத்து,
தம் மக்களுள் உம்முன்வந்து பலியிடத்தக்கவர்
யார் என்று அஞ்சாதார் உளரோ; அருள் நல்கும்
என்கின்றது. இறைவன்கொண்ட விடவேடத்தில்
ஈடுபட்டவர்கள் மயங்கித் தன்வசம்
அழிந்தமையின் அவர் அண்மைக்கண் நடந்து வந்து
பிச்சைபோடத் தக்கார் யார் என்று அஞ்சாதார்
உளரோ என்று கூறியதாம். நக்கீரே -
மகிழ்ந்திருப்பவரே.
7. பொ-ரை: திருவோத்தூரில்
முதற்பொருளாக விளங்குபவரே! மகரந்தம் பொருந்திய
கொன்றை மலர் விளங்கும் திருமுடியை உடைய தலைவரே!
என்றழைத்து உமது அழகினைப்புகழ்ந்து ஓதாதவர்
உளரோ? அருள் நல்குவீராக.
கு-ரை: கொன்றை விளங்கு முடியுடைநாதா
என்று ஓதார்யார்? அருள் நல்கும் என்கின்றது. தாது -
மகரந்தம். ஆதீர் - முதற்பொருளாயுள்ளவரே.
8. பொ-ரை: இக்கயிலைமலை
எம்மாத்திரம் என்று கூறிய இராவணனைக்
கால்விரலால் வென்றவரும், தம்மோடு மனம்
பொருந்தாத திரிபுரத்தசுரர்தம் மும்மதில்களைக்
கணையால் எய்து அழித்தவருமாகிய சிவபிரானது
திருவோத்தூர் என்று ஊர்ப் பெயரைச் சொன்ன
அளவில் சொல்லிய அவர்மேல் உள்ள வினைகள்
போகும்.
கு-ரை: ஓத்தூர் என்றார்மேல் உள்ள
வினைகெடும் என்
|