பக்கம் எண் :

680திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


588. நன்றாநான்மறை யானொடு மாலுமாய்ச்
சென்றார் போலுந் திசையெலாம்
ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்
நின்றீ ரேயுமை நேடியே. 9

589. கார மண்கலிங் கத்துவ ராடையர்
தேரர் சொல்லவை தேறன்மின்
ஓரம் பாலெயி லெய்தவ னோத்தூர்ச்
சரீ வன்கழல் சேர்மினே. 10

__________________________________________________

கின்றது. என்தான் - எம்மாத்திரம். ஒன்னார் - பகைவர். என்றார் மேல்வினை ஏகும் என்றும், என்றார்மேல் வினை ஏகும் என்றும் பிரித்துப் பொருள் கொள்ளலாம்.

9. பொ-ரை: திருவோத்தூரில் விளங்கும் இறைவரே! நல்லன செய்யும் நான்கு வேதங்களை ஓதுபவனாகிய பிரமன், திருமால் ஆகியோர் எரியுருவாய் நீர் ஒன்றுபட்டுத் தோன்றவும், அறியாராய் திசையனைத்தும் தேடித் திரிந்து எய்த்தனர் அவர்தம் அறிவுநிலையாதோ?

கு-ரை: அயனும் மாலும் உம்மைத் தேடித் திசையெல்லாம் சென்றார்போலும் என்று நகைசெய்கின்றது. நன்றாம் நான் மறையான் என்றது நல்லனசெய்யும் நான்மறைகளை ஓதியும் அவன் அறிந்திலன் எனக் குறிப்பித்தபடி. ஒன்றாயும் - பெருஞ்சோதிப் பொருளாயும். நேரில் இருந்தும் காணாது திசையெல்லாந் தேடினர்; அவர்கள் அறிவு இருந்தபடி என்னே என்று நகைசெய்தவாறு.

10. பொ-ரை: கரிய நிறத்தவராகிய சமணர்களும், கலிங்க நாட்டத்துவர் ஏற்றிய அடையை அணிந்த புத்தத் துறவியரும் கூறும் பொய் மொழிகளை நம்பாதீர். முப்புரங்களை ஓரம்பினால் எய்து அழித்தவனாகிய, திருவோத்தூரில விளங்கும் சிறப்பு மிக்க சிவபிரானின் கழல்களைச் சேர்வீர்களாக.

கு-ரை: ஓரம்பால் எயில் எய்தவன் காழல்சேருங்கள்; புத்தர் சமணர் பொய்யுரை கேளாதீர்கள் என அறிவுரத்தவாறு. தேரர் - பௌத்தர். கலியங்கத்துவராடையர் - துவர் ஏற்றிய கலிங்கநாட்டு ஆடையையுடைய புத்தர்கள்.