பக்கம் எண் :

702திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


633. வீடி லான்விளங் குங்கர வீரத்தெம்
சேடன் மேற்கசி வாற்றமிழ்
நாடு ஞானசம் பந்தனசொல்லிவை
பாடு வார்க்கில்லை பாவமே. 11

திருச்சிற்றம்பலம்

_______________________________________________

உரைகளை மெய்யெனக் கொள்ளாதீர். அனைத்துலகையும் காத்தருள் கின்றவனாகிய சிவபிரான் உறைகின்ற திருக்கரவீரத்து அடியவர்க்கு அல்லல் இல்லை.

கு-ரை: கரவீரத்தடியவர்க்கு அல்லல் இல்லை என்கின்றது. செடி - நாற்றம். அமணொடு என்பது அமண்ணொடு என விரித்தல் விகாரம் பெற்றது. சீவரம் - காவியாடை. கொடிய வெவ்வுரை - நெறியல்லா நெறிக்கண் செலுத்தலின் கொடிய வெம்மையான உரை யாயிற்று. கடியவன் - காத்தலையுடையவன்.

11. பொ-ரை: அழிலில்லதாவனாக விளங்கும் திருக்கரவீரத்துப் பெரியோன் மேல் அன்புக்கசிவால் தமிழை விரும்பும் ஞானசம்பந்தன் சொல்லிய இத்திருப்பதிகப் பாடல்களாகிய இவற்றைப் பாடுவோர்க்குப் பாவம் இல்லை.

கு-ரை: இது பாடுவார்க்குப் பாவமே இல்லை என்று கீழ்ப்போன திருப்பாடல்களில் தனித்தினியாகக் கூறியவற்றைத் தொகுத்துப் பயனாகக் கூறியது. சேடன் - பெருமையுடையவன். வீடிலான் - அழிவில்லாதான். கட்டுடையார்க்கே வீடும் உண்டு ஆதலின் இயற்கையிலேயே கட்டிலாத இறைவன் வீடிலாதான் எனப்பட்டான். அழிவில்லாதவன் எனலுமாம்.

பஞ்சாக்கர மாலை

கல்லேன் பிறநூல்கள் காழியர்கோன் பாட்டல்லால்
சொல்லேன் சுரரைத் தொழநினையே - னல்லசிறு
செஞ்சதங்கை கொஞ்சுதண்டைச் சிற்றடிக்கன் பாகவெழுத்
தஞ்சதங்கை யாமலக மாம்.

- கண்ணுடைய வள்ளலார்.