பக்கம் எண் :

 9. திருத்தூங்கானைமாடம்701


630. புனலி லங்கையர் கோன்முடி பத்திறச்
சினவ லாண்மை செகுத்தவன்
கனல வன்னுறை கின்ற கரவீரம்
எனவல் லார்க்கிட ரில்லையே. 8

631. வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த்
தெள்ளத் தீத்திர ளாகிய
கள்ளத் தானுறை யுங்கர வீரத்தை
உள்ளத் தான்வினை யோயுமே. 9

632. செடிய மண்ணொடு சீவரத் தாரவர்
கொடிய வெவ்வுரை கொள்ளேன்மின்
கடிய வன்னுறை கின்ற கரவீரத்
தடிய வர்க்கில்லை யல்லலே. 10

_______________________________________________

8. பொ-ரை: கடலால் சூழப்பட்ட இலங்கை மக்களின் தலைவனாகிய இராவணனின் தலைகள் பத்தும் நெரியுமாறு செய்து, கோபத்தோடு கூடிய அவனது ஆண்மையை அழித்தவனாய், எரிபோலும் உருவினன் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய கரவீரம் என்று சொல்ல வல்லார்க்கு இடர் இல்லை.

கு-ரை: கரவரரம் என்பார்க்கு இடர் இல்லை என்கின்றது. புனல் இலங்கை - கடல்சூழ்ந்த இலங்கை. சின வல் ஆண்மை - கோபத்தோடு கூடிய வலிய ஆண்மை. செகுத்தவன் - அழித்தவன்.

9. பொ-ரை: நீரில் தோன்றும் தாமரை மலர் மேல் உறையும் நான் முகனோடு திருமாலும் உண்மையைத் தெளியுமாறு ஒளிப் பிழம்பாகத் தோன்றி அவர்கள் அறியாவாறு கள்ளம் செய்தவனாகிய சிவபிரான் உறையும் திருக்கரவீத்தை நினைத்து போற்ற வினைகள் நீங்கும்.

கு-ரை: கரவீரத்தைத் தியானிக்க வினைவலி குன்றும் என்கின்றது. வெள்ளத்தாமரையான் - நீரில் இருக்கும் தாமரையானாகிய பிரமன். வெள்ளத்தாமரை என்றது சாதியடை. பிரமனிருக்கும் தாமரை உந்தித்தாமரையாயினும் தாமரையென்ற பொதுமை நோக்கிக் கூறப் பட்டது. தான்; அசை.

10. பொ-ரை: முடைநாற்றம் வீசும் அமணர்களோ காவியாடை அணிந்து திரியும் புத்தர்கள் ஆகியயோர்தம் கொடிய வெம்மையான