628. நிழலி னார்மதி சூடிய நீள்சடை
அழலி னாரழ லேந்திய
கழலி னாருறை யுங்கர வீரத்தைத்
தொழவல் லார்க்கில்லை துக்கமே. 6
629. வண்டர் மும்மதின் மாய்தர வெய்தவன்
அண்ட னாரழல் போலொளிர்
கண்ட னாருறை யுங்கரவீ ரத்துத்
தொண்டர் மேற்றுயர் தூரமே. 7
_______________________________________________
களையும் எய்தழித்த மூன்றாம் கண்ணை
உடையவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய
திருக்கரவீரத்தை அடைவார் வினைகள் நாசமாம்.
கு-ரை: கரவீரத்தை நண்ணுவார்வினை
நாசமாம் என்கின்றது பண்ணின் ஆர் மறை -
சத்தத்தோடு கூடிய வேதம்.
6. பொ-ரை: ஒளி பொருந்திய
பிறைமதியைச்சூடிய நீண்ட சடைமுடியினரும். அழலைக்
கையில் ஏந்தியவரும் வீரக்கழலை அணிந்தவரும்
ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய திருக்கரவீரத்
தைத் தொழவல்லவர்கட்குத் துக்கம் இல்லை.
கு-ரை: இத்தலத்தைத்
தொழுவார்க்குத் துக்கம் இல்லை என்கின்றது.
நிழலின் ஆர் மதி - ஒளி நிறைந்த பிறை.
7. பொ-ரை: தீயவர்களாகிய
அசுரர்களின் முப்புரங்களும் அழிந்தொழியுமாறு கணை
எய்தவரும், அனைத்து உலகங்களின் வடிவாக
விளங்குபவரும், விடம் போல ஒளிவிடும் கண்டத்தை
உடைய வரும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள
திருக்கரவீரத்துத் தொண்டர்களைப் பற்றிய
துயரங்கள் தூர விலகும். அழல் - தீப்போன்ற கொடிய
விடம்.
கு-ரை: அடியார்மேல் துயரம் தூரமாம்
என்கின்றது. வண்டர் - தீயோர்களாகிய
முப்புராதிகள். அழல்போல் ஒளிர் கண்டனார் -
விடத்தைப் போல் ஒளிவிடுகின்ற கழுத்தையுடையவர்.
துயர் தூரமே -துன்பம் தூரவிலகும்.
|