பக்கம் எண் :

 58. திருக்கரவீரம்699


625. ஏதம் வந்தடை யாவினி நல்லன
பூதம் பல்படை யாக்கிய
காத லான்றிக ழுங்கர வீரத்தெம்
நாதன் பாத நணுகவே. 3

626. பறையு நம்வினை யுள்ளன பாழ்பட
மறையு மாமணி போற்கண்டம்
கறை வன்றிக ழுங்கர வரரத்தெம்
இறைய வன்காழ லேத்தவே. 4

627. பண்ணி னார்மறை பாடல னாடலன்
விண்ணி னார்மதி லெய்தமுக்
கண்ணி னானுறை யுங்கர வரரத்தை
நன்ணு வார்வினை நாசமே. 5

_______________________________________________

கு-ரை: சங்கரன் கழல்சார வினை தங்குமோ என வினாவுகிறது. சங்கரன் - சுகத்தைச் செய்பவன்.

3. பொ-ரை: நல்லனவாகிய பூத கணங்களைப் பல்வகைப் படைகளாக அமைத்துக் கொண்டுள்ள அன்பு வடிவினனும் விளங்கும் திருக்கரவீரத்தில் எழுந்தருளிய எம் நாதனுமான சிவபெருமான் திருவடிகளை அடைவோரைத் துன்பங்கள் வந்தடையமாட்டா.

கு-ரை: கரவீரநாதன் பாதன் நணுக ஏதம் அடையா என்கின்றது. ஏதம் - துன்பம்.

4. பொ-ரை: நீலமணி போலக் கண்டத்தில் கறையுடையவனும், விளங்கும் திருக்கரவீரத்தில் உறையும் எம் இறைவனுமாகிய பெருமான் திருவடிகளை ஏத்த நம் வினைகள் நீங்கும். சஞ்சிதமாக உள்ளவும் மறையும்.

கு-ரை: கழல் ஏத்த வினைபறையும் என்கின்றது. பறையும் என்றதோடமையாது பாழ்பட பறையும் என்றது அதன் வாசனையும் கெடும் என்பதை விளக்க.

5. பொ-ரை: சந்த இசையமைப்புடன் கூடிய வேதங்களைப் பாடியும் ஆடியும் மகிழ்பவரும், வானகத்தில் சஞ்சரித்த மும்மதில்.