பக்கம் எண் :

72முதல் திருமுறையின் உரைத்திறம்(முதல் திருமுறை)


48-6. அருச்சுனன் செய்த தவத்தைக்கெடுத்து அவனைக் கொல்ல வந்த மூகாசுரன் என்னும் பன்றியைக் கொன்று, அருச்சுனனுடைய போர் வன்மையைப் பார்வதிக்குக்காட்டி அவனுக்கு இறைவன் அருள்செய்த செய்தி பாரதத்தில் உள்ளது.

56-1. ஆதி முதல்வர் - ஆதி முதல்வர் என்பது திருமூலநாதர் என்னும் தலத்திறைவர் பெயரைக் குறிக்கிறது - திருப்பாற்றுறைச் செய்தி.

62-9. பாணனிசை பத்திமையால் பாடுதலும் பரிந்தளித்தான் - இது பாணபத்திரன் வரலாறு எனப்படுகிறது - பெரியபுராணம்.

63. சீகாழியின் பன்னிரு பெயர்களும் சீகாழித் தலபுராணச் செய்திகளாக உள்ளன.

83-6. அம்பர்மாகாளத்து இறைவர் நஞ்சை உண்டு களித்தவர் - இவர் பெயர் காளகண்டேசுவரர் என்பது தலபுராணம். இவையன்றி, 101-5,7; 105-9,10; 114-6; 120-3; 21-5 போன்ற இடங்களிலும் புராணச் செய்திகளை உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

9. அருஞ்சொற்பொருள்:

2-2. குழை - பனந்தோட்டால் செய்யப்படும் மகளிர்காதணி. ஆடவர் காதில் செருகிக் கொள்ளும் மணத்தழை.

2-7. வெள்ளம் ஆர்ந்துமதிசூடி - தருக்கினாரை ஒடுக்கித் தாழ்ந்தாரை உயர்த்தி.

3-7. வருகாமன் - தேவகாரியத்தை முடிப்பதற்காக இந்திரன் கோபத்துக்கு ஆளாகி இறப்பதனைக் காட்டிலும் சிவபெருமான் மறக்கருணையால் உய்வேன் என்று விரும்பிவந்த காமன்.

3-11. வானத்திலும் உயர்வர் - பெருமானை இசைபாட வல்லார்க்கு, வானத்தின்பம் ஒருபொருளாகத்தோன்றாது ஆதலின் வானத்திலும் உயர்வர் என்றார்.

4-5. வெந்த வெண்ணீறு - இனிவேதற்கு இல்லாத - மாற்றமில்லாது ஒருபடித்தான வெண்ணீறு.