பக்கம் எண் :

 முதல் திருமுறையின் உரைத்திறம்73


4-7. காம்பு - முள் இல்லாத மூங்கில்.

5-11. பாடல் மாலை - ஒவ்வொரு திருப்பாடலுமே தனித்தனிப்பயனுடையதாய், வழிபடும் முறைகளை உடையதாய் இருக்கும் சிறப்புநோக்கி ஒவ்வொரு பாடலுமே ஒரு மாலை போன்றது.

6-2. மூவெரி காவல் ஓம்பும் - அந்தணர்கள் மணக்காலத்து எடுத்த தீயை அவியாதே பாதுகாக்க வேண்டியது மரபு ஆதலின் மூஎரி காவல் ஓம்பும் மறையாளர் என்றார்.

6-6. புனை அழல் - சாதகன்மம் முதலான பதினாறு கிரியைகளாலும் அழகு செய்யப்பட்ட யாகாக்கினி.

6-9. மந்திர வேதங்கள் - மந்திரவடிவான வேதங்கள். அவை இருக்கு வேதத்தில் வழிபாட்டு மந்திரங்களும், யசுர் வேதத்தில் பிரயோகங்களும் சாமவேதத்தில் கானங்களுமாக அமைந்தன.

7-3. யார்க்கும் நண்ணல் அரிய நள்ளாறு - நாடிழந்தும், நகரிழந்தும் மனைவியையிழந்தும் உருமாறியும் வினையை நுகர்ந்து கழித்த நளன் போன்றார் அன்றி வினைச் சேடமுடைய எவரும் நணுக முடியாத நள்ளாறு.

8-7. நீறுடையார் - தாம்தொன்மைக்கெல்லாம் தொன்மையாய் இருத்தலைத் தோற்றுவிக்கச் சர்வசங்காரகாலத்துத் திருநீற்றினைத் திருமேனியிலணிந்தவர்.

10-4. எதிரும்பலி - பிச்சை ஏற்பார் யாசியாது தெருவில் செல்ல மகளிர் தாமே வந்து இடுதல் மரபாதலின் அதனை விளக்க எதிரும்பலி என்றார்.

10-7. கரிகாலன - எரிபிணத்தை நுகர எரியில் நிற்பதால் கரிந்துபோன கால்களை உடையன.

10-9. தளராமுலை - உண்ணத்தளர்தல் நகிற்கு இயல்பாதலின் உண்ணாமுலை என்பார் தளரா முலை என்றார்.

11-5. ஆயாதன சமயம் பல - இறை உண்மையையும் இறை இலக்கணத்தையும் அளவையானும் அநுபவத்தானும் உள்ளவாறு