ஆராயாதனவாகிய சைவம்
ஒழிந்த ஏனைய சமயம்.
11-6. எல் ஆம் ஒருதேர் -
ஒளிப்பொருள்களாகிய சூரிய சந்திரர்கள் சக்கரங்களாக
அமைந்த ஒருதேர்.
18.11. குன்றாத்தமிழ் -
எஞ்ஞான்றும் திருவருள் குறையாத தமிழ்.
21-5. மலர்மிசை எழுதருபொருள் - பிரமரந்தரத்தின்
கண்ணதாகிய சகஸ்ர தளத்தை உடைய தாமரை மலர்மேல்
எழுந்தருளியிருக்கும் பேரொளிப் பிழம்பாகிய
பொருள்.
24-3. கானமான் - சாதி அடை.
இறைவன் கையில் உள்ளது காட்டு மான் அன்று.
27-8. மலையதனார் -
சண்டையிடுதற்குரிய முப்புராதிகள்.
27-9. நாடவல்லமலரான் -
பிரமனுக்கு நான்கு முகங்கள் ஆதலின் திரும்பித் திரும்பித்
தேடவேண்டிய அவசியமில்லை என்று நகைச்சுவை தோன்றக்
கூறியது.
29-2. ஆகம் வீடும் மறையோர் - வினைவயத்தான்
வந்த உடலை விடுத்து முத்தி எய்தும் அந்தணர்.
32-7. திமில் - வேங்கை
மரம்.
33-2. கிடை ஆர் ஒலி - மாணவர்கள் கூட்டமாயிருந்து
ஒலிக்கும் வேத ஒலி. இதனைச் சந்தை கூறுதல் என்ப.
33-9. சுணங்கு -
பிரிந்த பெண்களுக்கு உண்டாகும் தேமல்.
36-3. கொக்கின் இறகு -
கொக்கிறகம்பூ
45-3. பொழில், சோலை:
பொழில் - பொழில் இயற்கையே வளர்ந்த காடு.
சோலை - வைத்து வளர்க்கப்பட்ட பூங்கா.
47-6. மூன்று வேள்வியாளர் - தேவயஜ்ஞம்,
பிதிர்ஜ்யஜ்ஞம், ருஷியஜ்ஞம் என்னும் மூன்று
வேள்விகளையும் செய்பவர்கள்.
|