பக்கம் எண் :

 முதல் திருமுறையின் உரைத்திறம்75


47-7. பொறைபடாத இன்பம் - பொறுக்க முடியாத அளவு கடந்த இன்பம்.

48-1. அருமறை - அரிய அநுபூதி நிலையாகிய இரகசியம்.

48-5. ஐவேள்வி - தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்ற ஐவருக்கும் செய்யப்படும் வேள்வி.

50-7. ஆயம் ஆய - படைக்கப்பெற்ற.

53-5. மொந்தை, தக்கை - மொந்தை - ஒருமுகப்பறைவகைகளில் ஒன்று.

தக்கை - இருமுகப்பறை வகைகளில் ஒன்று. (உடுக்கையும் ஆம்)

53-6. சழிந்த - நெருங்கிக் கிடக்கின்ற.

53-9. மூலம் உண்ட நீற்றர் - மூலமலமாகிய ஆணவத்தின் வலிகெடுத்த திருநீற்றினை உடைய அடியவர்கள்.

54-1. பூத்தேர்ந்து - வண்டு, ஈக்கடி, எச்சம், முடக்கு முதலிய குற்றமில்லாத பூக்களை ஆராய்ந்து

54-4. தோட்டீர் - செங்காந்தள் பூவை அணிந்தவரே.

57-9. பரக்கினார் - அலைந்து திரிந்தவர்களாகிய அயனும் மாலும்.

விரக்கினான் - சாமர்த்தியம் உடையவன். விரகினான் எதுகை நோக்கி விரிந்தது.

59-1. ஒடுங்கும் பிணி - தமக்குரிய பருவம் வருந்துணையும் வெளிப்படாதே ஒடுங்கி இருக்கும் நோய்.

59-10. பகடு ஊர்பசி - யானைத்தீப்பசி.

64-4. செடி ஆர்வைகை - புதர்நிறைந்த வைகை.