65-5. விழைவு, காதல் - விழைவு -
பற்று, காதல் - பற்று முற்றி இன்றியமையாத்தன்மையில்
எழுந்த விருப்புள்ளம்.
66-3. தாராபகன்றில் - தாரா - சிறுநாரை,
பகன்றில் - அன்றில்.
67-6. ஈளைப்படுகு - உலராத சேற்றோடு
கூடிய ஆற்றுப்படுகை.
68-6. மூதார் - முனிவர் - மிக
ஆண்டு மூத்த முனிவராகிய சனகாதியர்.
70-7. தலையார்கமலம் - தலைமை
பொருந்திய தாமரை.
71-10. கபாலம் அயல் பொழிய -
கறவைப் பாத்திரம் நிறைந்து வழிய.
77-7. கூவிள மலர் - வில்வப்பூ.
பத்திரமே அன்றிப்பூவும் சூடப்பெறும் என்பது அறிவிக்கப்பட்டது.
83-2. ஆனான் -
இடபத்தை உடையவன்.
86-8. தீபமனத்தார் - எழுதிய தீபம்
போல நிலைத்த மனத்து அடியார்கள்.
98-1. சென்றடையாத திரு - நல்வினைப்
போகம் காரணமாக ஆன்மாக்களுக்கு வருவதுபோல,
வந்து அடையாத இயற்கையே ஆனதிரு.
103-4. துணையல் - இரண்டு இரண்டாக மலர்களைச்
சேர்த்துக்கட்டும் மாலை. கணையல் செய்தல் -
அம்பு எய்தல்.
104-10. அந்தர ஞானம் -
இடையீடுற்ற ஞானம்.
107-10. கட்டுரை - கட்டிக் (கற்பனை செய்து)
சொன்ன பொய்மொழி. இதுபோன்று அருஞ்சொல்
விளக்கங்கள் பல இவ்வுரையுள் காணப்படும்.
|