பக்கம் எண் :

 74. திருப்புறவம்829


797. கழுதுதுஞ்சுங் கங்குலாடுங்

கானூர் மேயானைப்

பழுதின்ஞான சம்பந்தன்சொற்

பத்தும் பாடியே

தொழுதுபொழுது தோத்திரங்கள்

சொல்லித் துதித்துநின்

றழுதுநக்கு மன்புசெய்வார்

அல்ல லறுப்பாரே. 11

திருச்சிற்றம்பலம்

____________________________________________________

மில்லை என்றபடி ஓமம் - ஆகுதி, கோண் நாகனையான் - வளைந்த பாம்பைப் படுக்கையாகக் கொண்டவன். சேமம் - பாதுகாப்பு. சேடர் - கடவுள்.

11. பொ-ரை: பேய்களும் தூங்கும் நள்ளிரவில் நடனம் ஆடும் கானூர் மேவிய இறைவனைக் குற்றமற்ற ஞானசம்பந்தன் போற்றிச் சொன்ன சொல்மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடித் தொழுது முப்பொழுதும் தோத்திரங்களைச் சொல்லித் துதித்து நின்று அழுதும் சிரித்தும் அன்பு செய்பவர்கள் அல்லலை அறுப்பார்கள்.

கு-ரை: இத்தோத்திரங்களைச் சொல்லித் துதித்து ஆனந்தத் தால் அழுதும் சிரித்தும் நிற்பவர்கள் துன்பம் அறுப்பர் என்கின்றது. கழுது - பேய் பொழுது - முப்பொழுதிலும்.

திருஞானசம்பந்தர் புராணம்

அதன்மருங்கு கடந்தருளால் திருக்கானூர் பணிந்தேத்தி

ஆன்ற சைவ,

முதன்மறையோர் அன்பிலா லந்துறையின் முன்னவனைத்

தொழுது போற்றிப்,

பதநிறைசெந் தமிழ்பாடிச் சடைமுடியார் பயில்பதியும்

பணிந்து பாடி,

மதகரட வரையுரித்தார் வடகரைமாந் துறைஅணைந்தார்

மணிநூல் மார்பர்.

- சேக்கிழார்