பக்கம் எண் :

940திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


980. தொழும னத்தவர், கழும லத்துறை
பழுதில் சம்பந்தன், மொழிகள் பத்துமே. 12

திருச்சிற்றம்பலம்

____________________________________________________

ஓரும் - தியானிக்கும்.

12. பொ-ரை: கழுமலத்தில் உறையும் குற்றமற்ற ஞான சம்பந்தன் அருளிய மொழிகளாகிய, இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி, பெருமானைத் தொழும் மனத்தவர் ஆகுக.

கு-ரை: பழுது - குற்றம். கழுமலம் - சீகாழி.

திருவிசைப்பா

எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டெமையாளும்
சம்பந்தன் காழியர்கோன் றன்னையும் ஆட்கொண்டருளி
அம்புந்து கண்ணாளுந் தானும்அணி தில்லைச்
செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை யாயிற்றே.

- பூந்துருத்தி நம்பிகாட நம்பி.