பக்கம் எண் :

 91. திருவாரூர்939


976. நறவ மார்பொழிற், புறவ நற்பதி
இறைவ னாமமே, மறவ னெஞ்சமே. 8

977. தென்றி லரக்கனைக், குன்றிற் சண்பைமன்
அன்று நெரித்தவா, நின்று நினைமினே. 9

978. அயனு மாலுமாய், முயலுங் காழியான்
பெயல்வை யெய்திநின், றியலு முள்ளமே. 10

979. தேர ரமணரைச், சேர்வில் கொச்சைமன்
நேரில் கழனினைந், தோரு முள்ளமே. 11

__________________________________________________

8. பொ-ரை: தேன் பொருந்திய சோலைகளை உடைய புறவமாகிய நல்ல ஊரில் எழுந்தருளிய இறைவன் திருநாமங்களை, நெஞ்சமே! நீ மறவாதே.

கு-ரை: நறவம் - தேன். புறவநற்பதி - சீகாழி. மறவல் நெஞ்சமே எனப் பிரிக்க.

9. பொ-ரை: தென் திசையிலுள்ள இலங்கை மன்னனாம் இராவணனாகிய அரக்கனைச் சண்பை மன்னனாகிய சிவபிரான் கயிலை மலையிடைப்படுத்து அன்று நெரித்த வரலாற்றை நின்று நினைத்துப் போற்றுவீர்களாக.

கு-ரை: தென்றில் அரக்கன் - தென்திசையில் உள்ள அரக்கன். குன்றில் - கயிலைமலையில். சண்பை - சீகாழி. அன்று - கயிலையைத் தூக்கிய காலத்து. நெரித்தவா - இராவணனை நெரித்தவாற்றை.

10. பொ-ரை: பிரமனும் திருமாலும் அடிமுடி தேடி முயலும் பரம்பொருளாகிய சீகாழிப் பதியில் விளங்கும் இறைவனது கருணைப் பொழிவைச் சார்ந்து நின்று நினைக்கும் என் உள்ளம்.

கு-ரை: முயலும் - தேடமுயற்சி செய்யும். காழி - சீகாழி.

11. பொ-ரை: புத்தர் சமணர் ஆகியோரை அணுகாத, கொச்சை வயத்து மன்னனாகிய சிவபிரானின் ஒப்பற்ற திருவடிகளை நினைந்து தியானிக்கும் என் உள்ளம்.

கு-ரை: கொச்சை - சீகாழி. நேரில் கழல் - ஒப்பற்ற திருவடி.