பக்கம் எண் :

 92. திருவீழிமிழலை951


993. இறைவ ராயினீர், மறைகொண் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே. 2

994. செய்ய மேனியீர், மெய்கொண் மிழலையீர்
பைகொ ளரவினீர், உய்ய நல்குமே. 3

995. நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறு மருளுமே. 4

996. காமன் வேவவோர், தூமக் கண்ணின்னீர்
நாம மிழலையீர், சேம நல்குமே. 5

____________________________________________________

2. பொ-ரை: எல்லோருக்கும் இறைவராக விளங்கும் பெருமானீரே, வேதங்களின் ஒலி நிறைந்த திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, கறை படிந்ததாக அளிக்கப்படும் காசில் உள்ள அக்கறையை நீக்கி முறையாக அளித்தருளுக.

கு-ரை: இறைவர் ஆயினீர் என இயற்கையே இறைவரை, ஆயினீர் என ஆக்கம்கொடுத்துக் கூறினார், முறைப்படி வேற்றுமையறக் கொடுக்காமையால். கறைகொள் காசு - அழுக்குப் படிந்த காசு; நாள்படச் சேமித்துவைத்த காசு என்பது கருத்து.

3. பொ-ரை: சிவந்த திருமேனியை உடையவரே, மெய்ம்மையாளர் வாழும் திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, படம் எடுக்கும் பாம்பை அணிகலனாகப் பூண்டுள்ளவரே, அடியேங்கள் உய்யுமாறு வாசியில்லாததாகக் காசு அருளுக.

கு-ரை: மெய் - உண்மைத்தன்மை. பை - படம்.

4. பொ-ரை: திருவெண்ணீற்றை அணிந்தவரே, ஆனேற்றில் ஏறி வருபவரே, பலராலும் புகழப்பெறும் திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே, காசு அருளுவதோடு எமக்கு முத்திப் பேறும் அருளுவீராக.

கு-ரை: பேறும் அருளும் - காசுகொடுத்ததோடமையோம்; வீடு பேற்றையும் கொடும் என்பதாம்.

5. பொ-ரை: காமனை எரிந்து அழியுமாறு செய்த புகை பொருந்திய அழல் விழியை உடையவரே! புகழ் பொருந்திய திருவீழி