997. பிணிகொள் சடையீனீர், மணிகொண்மிடறினீர்
அணிகொண் மிழலையீர், பணிகொண்டருளுமே. 6
998. மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே. 7
999. அரக்க னெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே. 8
____________________________________________________
மிழலையில் எழுந்தருளியவரே! எமக்குச்
சேமத்தை அருளுவீராக.
கு-ரை: தூமக்கண் - புகையோடுகூடிய தீக்கண்.
நாமம் - புகழ். சேமம் - பாதுகாவல். க்ஷேமம் என்பதன்
திரிபுமாம்.
6. பொ-ரை: கட்டப்பட்ட சடையை
உடையவரே, நீலமணி போன்ற கண்டத்தை உடையவரே, அழகு
பொருந்திய திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே,
எம்மைப் பணி கொண்டு அருளுவீராக.
கு-ரை: பிணிகொள்சடையினீர் - கட்டிய
சடையையுடையவரே. மணி - நீலமணி. பணி - ஏவல்.
7. பொ-ரை: உமையம்மையை ஒரு பாகமாகக்
கொண்டவரே, உயர்வுடைய திருவீழிமிழலையில்
உறைபவரே, கங்கை சூடிய திருமுடியை உடையவரே, எங்களது
ஐயுறவைப் போக்கியருளுக.
கு-ரை: பங்கு - ஒருபகுதி. துங்கம் - உயர்வு.
சங்கை - சந்தேகம், தேவரீரிடம் வேற்றுமை
சிறிதும் இல்லையாகவும் நாங்கள் சந்தேகிக்கிறோம்;
வாசிதீர அளித்து அதனைப்போக்கியருளும்.
8. பொ-ரை: இராவணன் கயிலை மலையின்
கீழ் அகப்பட்டு நெரிய இரக்கம் காட்டியருளியவரே,
எங்கும் பரவிய புகழ் உடைய திருவீழிழலையில்
உறைபவரே, எமக்கு அளிக்கும் காசில் உள்ள குறையைப்
போக்கியருளுக.
கு-ரை: அரக்கன் - இராவணன். பரக்கும்
- எங்கும் புகழ் பரவிய. கரக்கை - வஞ்சகம்.
|