1000. அயனு மாலுமாய், முயலு முடியினீர்
இயலு மிழலையீர், பயனு மருளுமே. 9
1001. பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே. 10
1002. காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழு மொழிகளே. 11
திருச்சிற்றம்பலம்
____________________________________________________
9. பொ-ரை: நான்முகனும் திருமாலும்
அடிமுடி காண முயலும் பேருருவம் கொண்டருளியவரே, எல்லோரும்
எளிதில் வழிபட இயலுமாறு திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே,
எமக்கு வீட்டின் பத்தையும் அருளுவீராக.
கு-ரை: பயன் - வீட்டின்பம்.
10. பொ-ரை: ஒன்றொன்றாக மயிர் பறித்த
தலையினை உடைய சமணர்கள் அறிய வேண்டுபவராகிய உம்மை
அறியாது வாழ்கின்றனர். மணம் கமழும் திருவீழிமிழலையில்
உறைபவரே, அடியேங்கள் உம்மைப் பிரிந்து வாழ்தல்
இயலாது.
கு-ரை: பறிகொள்தலையினார் - மயிர்பறித்த
தலையையுடைய சமணர். அறிவது அறியவேண்டிய உண்மை ஞானங்களை.
வெறி - மணம்.
11. பொ-ரை: இத்திருப்பதிகம் சீகாழிப்
பதியாகிய பெரிய நகருள் தோன்றி வாழும் ஞானசம்பந்தன்
திருவீழிழிழலை இறைவர் மேல் தாழ்ந்து பணிந்து
போற்றிய மொழிகளைக் கொண்டதாகும்.
கு-ரை: வீழிமிழலைமேல் தாழும்
மொழிகளே வல்லார் எல்லா நன்மையும் எய்துவர்
எனச் செயப்படுபொருளும், வினையும் வருவித்து முடிக்க.
|