சங்கமமாகிய மூன்று திருமேனியையும்
வழிபடலாம். குருமூர்த்தம் தோணியப்பர்; இலிங்க
மூர்த்தம் பிரமபுரீசர்; சங்கமமூர்த்தம் சட்டை நாதர்.
இதுவே திருஞானசம்பந்தப்பெருமான் அவதாரஸ்தலம்.
சுவாமிகளின் பெயர்கள்:
சுவாமி
பிரமபுரீசுவரர்; அம்மை திருநிலைநாயகி. சுவாமி அம்மன்
கோயில்களுக்கிடையில் ஞானசம்பந்தர் ஆலயம்
இருப்பது சோமாஸ்கந்தர் நிலையை நினைவூட்டுவது. திருத்தோணிச்
சிகரத்துள்ள இறைவர் பெரியநாயகர்; தோணியப்பர்
எனவும் வழங்கப்பெறுவர். இறைவி பெரியநாயகி; திருஞானசம்பந்தப்
பெருமானுக்குச் சிவஞானப்பால் அளித்தவர் இவரே.
தீர்த்தங்கள்:
பிரமதீர்த்தம்,
காளிதீர்த்தம், கழுமலநதி, விநாயகநதி, புறவநதி முதலிய
இருபத்திரண்டு தீர்த்தங்கள் உள்ளன.
வழிபட்டோர்:
முருகன், காளி, பிரமன்,
இந்திரன் முதலியோர். ஞானசம்பந்தர், அப்பர்,
சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்து அடிகள், நம்பியாண்டார்
நம்பிகள், சேக்கிழார், அருணகிரிநாதர் முதலியோர்
போற்றியுள்ளனர். கணநாதநாயனார் அவதரித்த தலம்.
திருக்கயிலாய பரம்பரையில் வந்தருளிய அருள்நமச்சிவாயர்,
கங்கைமெய்கண்டார் சிற்றம்பலநாடிகள் முதலியோர்
வாழ்ந்த தலம்.
விழாக்கள்:
ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும் அர்த்தயாமத்தில் ஸ்ரீ சட்டைநாதருக்கு
விசேஷ வழிபாடு நடைபெறும். சித்திரைமாதம் இறைவன்
இறைவியர்க்குப் பெருவிழா நடைபெறும். அதில் இரண்டாந்திருநாள்
திருஞானசம்பந்தருக்கு உமையம்மை அளித்தருளிய திருமுலைப்பால்
திருவிழா. இவ்விழாக்களிற் பெரும்பாலன திருஞானசம்பந்தர்
ஐதீகத்தை ஒட்டியனவேயாம்.
கல்வெட்டு:
இத்தலத்துக்கு நாற்பத்தேழு
கல்வெட்டுகள் உள்ளன. இரண்டாங்குலோத்துங்கன் கல்வெட்டுமுதல்
வேங்கட தேவராயர்
|