2789.
|
உரிந்தகூறை
யுருவத்
தொடுதெரு வத்திடைத்
திரிந்துதின்னுஞ் சிறுநோன்
பரும்பெருந் தேரரும்
எரிந்துசொன்னவ் வுரைகொள்
ளாதேயெடுத் தேத்துமின்
புரிந்தவெண் ணீற்றண்ணல்
பாதிரிப்புலி யூரையே. 10 |
2790.
|
அந்தண்நல்
லாரகன்
காழியுள் ஞானசம்
பந்தன்நல் லார்பயில்
பாதிரிப் புலியூர்தனுள்
சந்தமாலைத் தமிழ்பத்தி
வைதரித் தார்கண்மேல்
வந்துதீயவ் வடையாமை
யால்வினை மாயுமே. 11
திருச்சிற்றம்பலம்
|
உண்மை - திருமுறையில்
முதற்பாட்டில் உணர்த்தப்பட்டது. முன்னம்...
அளந்தவன் - திருவிக்கிரமன். தன்னம் - அற்பம். திருவடியாக்
கொள்ளின் இனம்பற்றித் திருமுடியும் கொள்ளப்படும்.
10.
பொ-ரை: ஆடையின்றித் தெருவில் திரிந்து தின்னும்
அற்பவிரதத்தை உடைய சமணரும், புத்தரும் எரிவினால் சொல்லும்
உரைகளைக் கொள்ளாது. திருவெண்ணீறு அணிந்த திருப்பாதிரிப்புலியூர்
அண்ணலைப் புகழ்ந்து போற்றுங்கள்.
கு-ரை:
உரிந்த. . . நோன்பர் - ஆடையின்றித் தெருவில் திரிந்து
தின்னும் அற்பவிரதத்தையுடையவர் என்னும் சமணர். எரிந்து சொன்ன
உரை:- எரிவினாற்சொன்னார்.
11.
பொ-ரை: அந்தணர்கள் நிறைந்துவாழும் அகன்ற சீகாழிப்
பதியில் திருஞானசம்பந்தன், நல்லவர் வாழும் திருப்பாதிரிப்
|