பக்கம் எண் :

514

1863.



சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும்
வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
மங்கை யுமைபா கமுமா கவிதென்கொல்
கங்கை சடைமே லடைவித் தகருத்தே.        2
1864.



குரவங் குருக்கத் திகள்புன் னைகண்ஞாழல்
மருவும் பொழி்ல்சூழ் மறைக் காட் டுறைமைந்தா
சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல்
அரவம் மதியோ டடைவித் தலழகே.         3


‘செவ்வனிறயோ இறைபயத்தலோ செய்க’ என்பார், ‘இறைவைத் தருள்
செய்க’ என்றருளினார். ‘எனக்கு அருள்செய்க’ என்று இவ்வாறு வேண்டுவது
ஆசிரியர் திருவாக்கில் வேறு எங்கும் காண்டல் அரிதாகும். இதற்குப் பிறர்
உரைத்தது பொருந்துமோ?

     2. பொ-ரை: சங்குகளையும் முத்துக்களையும் அலைக்கரங்களால்
கரையில் எறியும் மரக்கலங்களை உடைய கடல் சூழ்ந்த மறைக்காட்டில்
உறையும் மைந்தனே! உமைமங்கை ஒருபாகமாக இருக்க நீ கங்கையைச்
சடைமீது கொண்டுள்ள கருத்தின் காரணம் யாதோ?

     கு-ரை: சங்கம் - சங்குகள். தரளம் - முத்துக்கள். எற்றும் -
(அலைகள்) எறியும். வங்கம்-மரக்கலம். உமையோடு கூடியிருந்தும்
கங்கையைச் சடைமேல் அடையச் செய்ததன் கருத்தை வினாவியது.

     3. பொ-ரை: குரா, குருக்கத்தி, புன்னை, புலிநகக்கொன்றை
ஆகியன மருவிய பொழில் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் மைந்தனே!
தலைமாலையும் மலர்மாலையும் திகழும் உன் செஞ்சடைமேல் தம்முள்
பகை உடைய பாம்பையும் மதியையும் உடன் வைத்துள்ளதற்குக் காரணம்
யாதோ?

     கு-ரை: குரவம் - குராமரம். குருக்கத்தி - மாதவி
ஞாழல்-புலிநகக்கொன்றை. கோங்குமாம். சிரம் - தலை, தலைமாலை.
‘தலைமாலை தலைக்கணிந்து தலையாலே பலிதேருந்தலைவன்’ இது
பாம்பைப் பிறையொடு சூடிய அழகை வினாவியது. வினாச்சொல்லை
வருவித்துரைக்க. திங்களை பகைமை கருதிவிழுங்கும் ‘அழகு’ என்று
குறித்தருளினார்.